ஜாக் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று சொன்ன பி.ஜே.யும் கொடுத்த வாக்குறுதியை காத்து வரும் கமாலுத்தீன் மதனி.யும்.

இன்று அய்யா கொய்யா என்று கத்தக் கூடியவர்கள். ஒவ்வொரு ஊரிலும் தவ்ஹீது பெயரால்  தெருத் தெருவாகக் கூட்டம் போட்டார்கள்.  என்ன பேசினார்கள்?

அந்தந்த தெருவில் இருந்த கண்ணியமான குடும்பத்தவர்கள் பெயர் சொல்லி இழிவுபடுத்தினார்கள். பெரிய விருந்து வைத்து விட்டதால் அவன் ரத்தம் கக்கி சாவான். ஹார்ட் அட்டாக் ஆகி சாவான் என்று பேசினான்.

(இப்படிப் பேசியவன் எப்படிப்பட்ட ஆள்| என்றால் அடுத்தவன் பணத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் போன் பேசினான். (அன்றைய 50 இன்றைய ஒரு லட்டசம்) இவ்வளவு ரூபாய்க்கு என்ன பேசினாய் என்று கேட்டதற்கு. ரத்த தானம் சம்பந்தமான மஸாயில் பிரச்சனை தெரிந்து கொள்ளத்தான் என்றான்.)

தப்லீக் காரன் ஊர் ஊரா ஜமாஅத்தில் போகிறேன் என போறான். தப்லீக் காரன் மனைவி ஊர் மேலே  போகிறாள் என்று பேசினான்.    (ஊர் மேலே என்றால்  விபச்சாரியாக என்று அர்த்தம்)


கூலிக்கு மாரடிக்க வந்த இவர்கள். அதை மறைக்க மற்றவர்களை கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று பேசினார்கள். அப்பொழுதெல்லாம் ரசிகர்களுக்கு இனித்தது. இப்பொழுது அவன்கள் வாய் ஆதாரத்துடன், அவன்கள் சொல்லி உள்ள வீடியோ, ஆடியோவில் அவன்கள் பேசியதைக் கொண்டே  அவன்கள் யார் என்று நிரூபிக்கப்படும்பொழுது. புளிக்கிறது, கசக்கிறது. 

விடியல் வெள்ளி பைஅத் - சத்தியம் வாங்குகிறான் என்று இவர்கள் பேசினார்கள். அதே காலத்தில்தான் பி.ஜே.யும் தனது சகாக்களிடம் ஜிஹாது செய்யப் போவதாக சத்தியம் வாங்கினார்.

இனி வர உள்ள  செய்தி இன்று எழுதியது அல்ல. பி.ஜே.யின் பினாமியாக ஹாமித் பக்ரி இருந்தபொழுது 10.05.2002.ல் கமாலுத்தீன் மதனி கையைப் பிடித்து அழுத பி.ஜே. என்ற தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்திலிருந்து உள்ளது.  (பி.ஜே. சொன்ன 5 சி.டி.க்களுக்கான பதிலில் இருந்து உள்ளது)

ராஜினாமா கடிதம் பற்றி பி.ஜே. கூறிய விபரத்தை சுருக்கமாகத் தருகிறேன். 
ஷஹீதாவேன், அல்லது பிடிக்கப்படுவேன்.

''தவ்ஹீது பிரச்சாரத்திற்கு என்று தாஇகள் உருவாகிவிட்டார்கள். சொல்லப்பட வேண்டிய எல்லா மஸாயில்களும் சொல்லப்பட்டு விட்டது. மிக முக்கிய தீமையான ஷிர்க்கை தெளிவுபடுத்தி விட்டோம். 

நாட்டு சூழலில் இனி நம்மீது உள்ள கடமை ஜிஹாதுதான். நானே ஸ்பாட்டுக்கு போவேன், (இப்படிச் சொன்னால், இப்படிச் சொல்லி யாரையாவது பலி ஆக்கப் போகிறார் என்று அர்த்தம். இதை இப்பொழுது எல்லோரும் தெரிந்து கொண்டோம் என்பது தனி விஷயம்.) ஷஹீதாவேன், அல்லது பிடிக்கப்படுவேன். எதுவும் நடக்கலாம். அதனால் ஜாக் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.

நாய் வேஷம் போட்டால் குரைத்து தானே ஆகனும்.

ஜாக் தவ்ஹீது பிரச்சாரத்திற்கு என்று உருவான அமைப்பு. அது இருந்தால் தான் தவ்ஹீது பிரச்சாரம் நடைப்பெறும். நம்மால் அது பாதித்து விடக்கூடாது. எனவே என்னுடன் ஜிஹாதுக்கு வரக் கூடியவர்கள், ஆதரவு தருபவர்கள், இப்படி உள்ள அனைவரும் ஜாக்கிலிருந்து வெளியேறனும். 

அது ஒரு டிராமாதான் என்றாலும் டிராமா என்று தெரியக்கூடாத அளவுக்கு இருக்கனும். டிராமாதான் என்றாலும் டிராமாவில் நாய் வேஷம் போட்டால் குரைத்து தானே ஆகனும். அது மாதிரி உள்ளத்தால் ஜாக்கை நேசித்தாலும் அணு அளவு கூட அது வெளித் தெரியா வண்ணம் ஜாக் எதிர்ப்பைக் காட்டனும்.

ஜாக்கிலிருந்து நாம் விலகவில்லை. ஜாக்கிலிருந்து விலகுகிறோம் என்றால் தவ்ஹீது அமைப்பிலிருந்து விலகுகிறோம் என்று ஆகிவிடும். 

ராஜினாமாவில் கூட ஜாக்கிலிருந்து விலகுகிறேன் என்று எழுத மாட்டேன். ஷுராவிலிருந்து விலகுகிறேன் என்றுதான் எழுதுவேன். வெளியில் அது பொதுவான விலகலாகவே பேசப்படும். 

(இதற்கு வேறு ஒரு சமயம் வேறு ஒரு காரணம் சொன்னார். ஷுராவிலிருந்து விலகுகிறேன் என்று எழுதுவதற்கு காரணம் பிரச்சனை வந்தால் பி.ஜே. ஜாக்கில் இல்லை என ஜாக் நம்மை கை விட்டு விடக் கூடாது என்று)
சீனி நெய்னா முஹம்மது கைது.

நம்மை ஜாக்கின் எதிர் அணியினர் என்று காட்டுவதற்காக நாம் சொல்லும் காரணங்கள் பொய்யாக இருந்தாலும் ஜிஹாதிற்காக கூறப்படும் பொய் மார்க்கத்தில் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது. 

அமீரிடம் மட்டும் உண்மையை சொல்லி விட வேண்டும். எதிர்ப்பைக் காட்ட தலைமையைத்தான் கடுமையாக சாட வேண்டியதிருக்கும்'' என்றார். இது மாதிரியான கால கட்டத்தில்தான் சீனி நெய்னா முஹம்மது கைது, பி.ஜே. தகப்பனார் மறைவு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

பி.ஜே. சொன்னார்ன்னா? பி.ஜே. சொன்னார்! பி.ஜே. சொன்னார்னு நிப்பீங்க.

பி.ஜே. அமீரிடம் சென்னாரா என்பது எனக்குத தெரியாது சொன்னதாக 01-09-1997-ல்  (அரிஸ்ட்டோ ஹோட்டல் ரகசிய கூட்டத்தில்)  சொல்லிக் காட்டுகிறார். பி.ஜே. சொன்ன மாதிரி 

1994-ல் அமீரிடம் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி கூறினார். இது எனக்குத் தெரியும். அப்பொழுது அமீர் அவர்கள் 'இது நீடிக்காது' என்று கூறினார்கள். அதற்கு வந்திருந்தவர், 'நாட்டின் இன்றைய சூழ்நிலையைப் பார்த்தீர்களா?' என்று கேட்டார். 

அமீர் அவர்கள் 'உங்கள் மீது ஜிஹாத் கடமையா?' என்று கேட்டார். வந்திருந்தவர், திரும்பவும் நாட்டுச் சூழல் பற்றி பேசினார். உடன் அமீர் அவர்கள், அவருக்கே உரிய பாணியில் டென்சனாகி ''ஏங்க! நீங்களெல்லாம் நான் சொன்னா கேட்க மாட்டீங்க. உங்க மாதிரி சில பேர் இருக்கீங்க பி.ஜே. சொன்னார்ன்னா? பி.ஜே. சொன்னார்! பி.ஜே. சொன்னார்னு நிப்பீங்க.

இன்னும் எத்தனை ஊரில் ஷிர்க்க பத்தி சொல்ல வேண்டி இருக்கு.

அவரும் எங்கிட்ட ரொம்ப நாளா சொல்லத்தான் செஞ்சார். இஸ்லாத்தை விமர்சிக்கிறான்னா நீங்க அவனைக் கூப்பிட்டு இஸ்லாத்தை சொன்னீங்களான்னு கேட்டேன். அவர் வாதம் பண்ணினார். அவர் மாதிரி வாதம் பண்ணெல்லாம் எனக்கி தெரியாது. அவர் வழி அவருக்கு என் வழி எனக்கி. அவர் இதிலே இனி நான் தலையிட மாட்டேன். அவர் பின்னாலே போறா இருந்தா போங்கோ. இன்னும் எத்தனை ஊரில் ஷிர்க்க பத்தி சொல்ல வேண்டி இருக்கு. இத முதல்ல சிந்திச்சு பார்த்தேளா?

நீங்க என்னை என்ன மாதிரி பேசினாலும் அதுக்கு நான் பதில் பேச மாட்டேன்.


ராமகோபாலன் பேசுறான் அவன் பேசுறான் இவன் பேசுறான்னு சொல்றேளே. அவன் இஸ்லாத்த தெரிஞ்சிகிட்டா பேசுறான். அந்த மாதிரி ஆள்கிட்ட இஸ்லாத்தை சொன்னீங்களா? உங்களுக்கு அது கடமை இல்லையா?'' என்று கேட்டார். உங்கள் கோழைத்தனத்தால் இப்படி பேசுகிறீர்கள் என்று வந்தவர் கூறினார். அதற்கு அமீர் ''நான் சொல்வதை சொல்லி விட்டேன் இனி உங்க இஷ்டம். நீங்க என்னை என்ன மாதிரி பேசினாலும் அதுக்கு நான் பதில் பேச மாட்டேன்னு அவர் (பி.ஜே.க்) கிட்டேயும் சொல்லி விட்டேன்'' என்று சொல்லி விடுகிறார். 

அது வேற விஷயம். சொல்ல முடியாது.

திருச்சி அரிஷ்ட்டோ காலை அமர்வில் பி.ஜே., எஸ்.கே.யை எவ்வளவோ கடுமையாக விமர்சித்தார். இருந்தாலும் அந்த அமர்வில் ராஜினாமா கடிதம் பற்றி கூற வேண்டி நிலை வந்த போதும் எஸ்.கே.என்ன சொன்னார்? ராஜினாமா தந்திருக்கார்ன்னா... அது வேற விஷயம். சொல்ல முடியாது. என்று தான் சொல்கிறாரே தவிர. எதற்காக ஷுராவிலிருந்து விலகினார் என்று சொல்லவில்லை.

கொடுத்த வாக்குறுதியை காத்து வருகிறார் கமாலுத்தீன் மதனி.

நான் என்ற அகம்பாவம் அனா நிய்யத்து, கணக்கு சரி இல்லை. இப்படி 38 மவுலவிகள் முன் அநியாயமாக கேவலப் படுத்தினார் பி.ஜே. அப்போதும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறார் எஸ்.கே. 

யாராக இருந்தாலும் இவ்வளவு பொறுமையைக் காட்ட மாட்டார்கள். நீங்கள் ஏன் ராஜினாமா கடிதம் கொடுத்தீர்கள்? சொல்லவா? என்று மிரட்டியாவது இருப்பார்கள். 

இப்படியெல்லாம் மிரட்டாமல் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு பொறுமையுடன் ''நீங்க என்னை என்ன மாதிரி பேசினாலும் அதுக்கு நான் பதில் பேச மாட்டேன்'' என்று கொடுத்த வாக்குறுதியை காத்து வருகிறார் கமாலுத்தீன் மதனி. 

கமாலுத்தீன் மட்டுமல்ல பாக்கர் போன்ற இன்னும் பலரும் சத்தியம் செய்து கொடுத்து விட்டு வாய் மூடி மவுனியாக உள்ளார்கள். ஹக்குக்கு எதிரானவர்களிடம் செய்த சத்தியத்தை முறிப்பதுதான் இஸ்லாம் கூறும் வழி.

சமுதாய இளைஞர்கள் வாழ்வை ஜிஹாது பெயரால் பாழாக்கி காட்டிக் கொடுத்த கயவன். சமதாய துரோகி, விபச்சாரகனான அவன் மீதும். அவனது வாயால் வெளிப்பட்ட விபச்சாரத்தை மறைத்து பொய் என முட்டுக் கொடுத்து நிற்கும் சுயநலமிகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக.


Mohideen Sintha இவன் சாகுற வரைக்கும் இப்டியே அடுத்தவரை புறம் பேசிக்கிட்டு அவதூறு சொல்லிக்கிட்டு கடைசில வேட்டிய கிழிச்சிட்டு லூசா திரியப்போறான், லூசுல் இலாஹி


அடுத்தவரை அல்ல சமுதாயத்தை கெடுத்தவரை அடையாளம் காட்டுகிறோம். அதுவும் அவரது வாய்ஸைக் கொண்டு ஆதாரப்பூர்வமாக அடையாளம் காட்டுகிறோம். அவரது வாயால் சொல்லி உள்ளது அவதுாறு என்றால் அதற்கு சொந்தக்காரர் அவர்தான். பகிரங்மாக சொல்வதால் இது புறம் அல்ல. 30 ஆண்டுகளாக உலக முஸ்லிம்கள் பற்றி அவர்கள் கூறியது அவதுாறு புறம்.


இலாஹி என்றால் என்னுடைய இறைவன் என்று அர்த்தம் லுாசுல் இலாஹி என்றால் என்னுடைய இறைவனின் லுாசு என்று அர்த்தம் வாழ்க மைதீன் சிந்தா

http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_9.html 






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.