முஸ்லிம் அல்லாத முரளிகளும் முஸ்லிம் பெயர் தாங்கிகளான முனாபிக்குகளும்

அடுத்தவரை குறை சொல்லவில்லை சமுதாயத்தை கெடுத்தவரைத்தான் அடையாளம் காட்டி வருகிறோம். நாம் வெளியிட்டுள்ள உண்மைகளை சத்தியம் செய்து வெளியிட்டு இருக்கிறோம்.

அவற்றை மறுப்பவர்கள் அவதுாறு என்று மட்டும் தான் சொல்கிறார்கள். சத்தியம் செய்து மறுப்பது இல்லை. காரணம்அ.வர்கள்  பொய்யர்கள். அதனால் அவர்களால் நாம் கூறியுள்ளபடி சத்தியம் செய்து மறுக்க முடிவதில்லை.

ஆகவே இனி மறுக்கும் பொய்யர்கள் சத்தியம் செய்து மறுக்காவிட்டால். அந்த பொய்யர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக என்று நாம் வேண்டிக் கொண்டு விஷயத்திற்கு வருவோம். 

இந்தியாவில் எந்த வழக்குகளாக இருந்தாலும் அது நீடித்துக் கொண்டே போனாலும் கைதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஜாமீன் கொடுத்து விடுகின்றனர். பல ஆண்டுகளாகியும் ஜாமீன் கொடுக்கப்படாத கைதிகள் இந்தியாவில் எங்கும் இல்லை, தமிழ்நாட்டைத் தவிர.

ஆண்டுகள் பல உருண்டோடியும்   ஜாமீன் கிடைக்காத நிலையில் கைதிகளாக இருந்த  முஸ்லிம் கைதிகள் குஷ்டம், காதில் சீல் வடிதல், டி.பி, கண் பார்வை மங்கல், மன நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இருந்தனர். சரியான மருத்துவம் இன்றி மேலும் மேலும் நோய்களின் பாதிப்புகள் கூடிக் கொண்டே போனது.

சிறையில் கைதிகளாக பல தொல்லைகளுடன் கஷ்டப்பட்டார்கள் என்றால்,  அந்த முஸ்லிம் சிறைவாசிகள் குடும்பங்களின் நிலை என்னவாக இருந்தது?

உண்ண உணவின்றி! உடுக்க உடையின்றி! படுக்க வீடின்றி! நோய்க்குரிய சிகிச்சையின்றி! குழந்தைகளை படிக்க வைக்க பணமின்றி! வழக்குகளுக்குரிய வழக்கறிஞரின்றி இவர்கள் பட்ட வேதனைகளை வார்த்தையில் வடித்திட இயலாது.

சிறைவாசிகளாக உள்ளவர்களில் சிலரது தாய், தந்தையர்கள் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் வீதிகளில் தங்கள் அன்றாட உணவுக்காக உதவி கேட்டு நின்றனர். சாப்பாடு கிடைக்காமல் தினமும் பப்பாளி பழம் தின்று ரத்த பேதிக்குள்ளானார்கள் சிலர். 

பர்தாவை பேண வேண்டிய பெண்கள் விதியை மீறி வீதிக்கும் சென்று விட்டனர். முஸ்லிம் அல்லாதவர்களிடம் சென்று முஸ்லிம் பெண்கள் தினக் கூலிகளாக இருந்தனர். படிக்க வேண்டிய வயதில் அவர்களது பிள்ளைகளும் வீதிகளில் நின்றனர். இருந்தும் வறுமை நீங்கவில்லை. 

சகோதரன் விடுதலையாகி தனக்கு கல்யாணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார் சகோதரி. ஜெயிலில் உள்ள சகோதரன் மன நோயாளி ஆகி விட்டான் என்ற செய்தி வருகிறது. அதிர்ச்சி அடைந்த சகோதரியும் மன நோயாளி ஆகி விட்டார்.

இனி தனக்கு வாழ்வு இல்லை என்று எண்ணிய சகோதரி மன நோயில் தலையில் மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து எறிந்து மரணம் அடைந்து விட்டார். 

ஆண்டுகள் பல ஆகி விட்டது இனி கணவன் விடுதலையாகி வரமாட்டான் என்று எண்ணிய பெண்கள் தலாக் வாங்கி விட்டனர். சிலர் குலா செய்து விட்டனர். இன்னும் சில எழுத முடியாத வரம்பு மீறுதல்களும் உண்டு.

இப்படிப் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக போலீஸில் போய் 62 பக்கங்களுக்கு வாக்கு மூலம் கொடுத்தார்கள். கோவை முஸ்லிம் கைதிகளுக்கு எதிரான வழக்கில் போலீஸ் தரப்ப சாட்சியாக தங்களை இணைத்துக் கொண்டார் போலீஸ் சார்பில் கோர்ட்டுக்கு வந்து கோவை முஸ்லிம் கைதிகளுக்கு எதிராக சாட்சியும் சொன்னார்கள்.  யார் அவர்கள்? இந்துக்களா? கிறிஸ்தவர்களா? இல்லை. 

ராமகோபாலனா? ஹெச். ராஜாவா? கல்யாண ராமனா? சுப்ரமணி சுவாமியா? ஸ்ரீதரனா? இல.கணேசனா? அத்வானியா? உமாபாரதியா? முரளிமனோகர் ஜோஷியா?,அருண்ஜேட்லியா? பால்தாக்ரேக்களா? இல்லவே இல்லை. பிறகு யார்? அவர்களது இயக்கத்தைச் சார்ந்தவர்களா? அவர்களை விட மகா கேடு கெட்ட இயக்கத்தைச் சார்ந்தவர்கள்தான். 


குண்டு வெடிப்பு வழக்கில் 2400 அரசு தரப்பு சாட்சிகள் இருந்தனர். அதில் 50 பேர்கள்தான் முஸ்லிம்கள்.

சாட்சி சொல்ல வந்த பெரும்பாலான இந்து சகோதரர்கள், அதிகமான பாதிப்புகளுக்குள்ளாகிவிட்ட முஸ்லிம் சிறைவாசிகள் மீது இறக்கப்பட்டு தங்களுக்கு சரியாக நினைவு இல்லை என்று கூறி விட்டனர். 

கோவை சம்பவத்தின்போது பொறுப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் முரளி அவர்கள், சம்பவம் நடந்தது உண்மை. 6 வருடங்கள் ஆகி விட்டது. எனவே யார் என்று எனக்கு அடையாளம் காட்டத் தெரியவில்லை மறந்து விட்டது என்று கூறி விட்டார்.


முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக நேரடியாக களம் இறங்கி பாடுபட முடியாதவர்களெல்லாம் அல்லாஹ்விடம் துஆச் செய்ய மறந்து விட்டாலும் குறைந்த பட்சம் விடுதலையாக வேண்டும் என்று மனதளவிலாவது நல்  எண்ணத்துடன் இருந்தார்கள் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

முஸ்லிம் அல்லாத முரளிகளை அறிந்து விட்டீர்கள்.  முஸ்லிம் பெயர் தாங்கிகளான முனாபிக்குகள் யார் இன்னுமா தெரியவில்லை? தெரிந்து கொள்ளுங்கள்.

தவ்ஹீத் தவ்ஹீத் என்று சொல்லிக் கொள்ளும் பி.ஜெய்னுல் ஆப்தீன் என்பவரின் அணியினர்தான். அவர் ததஜவை புதிதாக துவங்கியபொழுது அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த அலாவுதீன் என்பவரும் பி.ஜெய்னுல் ஆப்தீனும்  போலீஸ் தரப்புக்கு ஆதரவாக திட்டமாக உறுதியான முறையில் சாட்சி கூறினார்கள். 

இவர்கள் சாட்சி கூறியதும் போலீஸ் அதிகாரிகளெல்லாம் பி.ஜே.யிடம் கை குலுக்கி நன்றி கூறி போலீஸ் படை புடை சூழ வழி அனுப்பி வைத்தார்கள். 

இந்த மவுலவிதான் முஸ்லிம் சமுதாய இளைஞர்களை ஜிஹாது பெயரால் இந்த கதிக்கு ஆளாக்கியவர். இதை யாராவது சத்தியமிட்டு மறுக்க முடியுமா?

எல்லாவற்றுக்கும் மூல காரணமான  இவன் கடைசியில்  எப்படி ஏமாற்றி வருகிறான்? 

1992 டிசம்பர் ஆறில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் எனது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. சட்டமும் அரசும் முஸ்லிம்களுக்கு நீதி வழங்காதுநாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்தேன். ஆக்ரோஷமாக பேசியுள்ளேன். அல் ஜன்னத்தில் கடுமையான தலையங்கங்களை எழுதியுள்ளேன். புரிந்து கொள்ளாத சிலர்  அந்த நேரத்தில் சிலர் வேறு பாதைக்குச் சென்றிருக்கலாம் அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்.

வன்முறைக்கும் ஜிஹாதுக்கும் உள்ள வேறுபாடு குர்ஆனைத் தமிழாக்கம் செய்வதற்காக நான் ஆய்வுகள் செய்த போது தெளிவாகத் தெரிந்தது.

நான் தீவிரமான எண்ணப் போக்கில் இருந்த போது தான் சிறைவாசிகளுக்ககாக எந்த விளைவு ஏற்பட்டாலும் கவலையில்லை என்று துணிந்து இறங்கினேன். அந்தக் கருத்தில் நான் இருந்த போது அது சரியானது என்று பட்டதால் நான் அதில் மிக உறுதியாக இருந்தேன். என்று எழுதி ஏமாற்றியுள்ளான். 

சிறைவாசிகளுக்ககாக எந்த விளைவு ஏற்பட்டாலும் கவலையில்லை என்று துணிந்து இறங்கினேன்  என்று வார்த்தையால் விளையாடி ஏமாற்றி உள்ளான். இந்தக் கொலைகாரனின் கொலை வெறிச் செயல் இன்றும் நின்றபாடில்லை. 

இமாம் அலி போன்றவர்களை பெண்கள் கல்லுாரிகளுக்கு வரவழைத்து விடிய விடிய பேசி தீவிரவாதத்தில் ஈடுபடச் செய்தான். இது இட்டுக்கட்டப்பட்டது பொய் என்று எண்ணினால் எனக்கு எதிராக துஆச் செய்யுங்கள். 

உண்மை என்று நம்புவர்கள். இந்த காமுகனுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். இந்த காமுகனை காமுகன் என்று தெரிந்த பின்பும் அந்த உண்மையைப்“ பொய்ப்படுத்தி அவனை ஆதரித்து நிற்பவர்களுக்கு எதிராகவும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். 

அல்லாஹ்வின் சாபம் பொய்யர்கள் மீது இறங்கட்டுமாக!

http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_11.html 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.