பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்?

கண்ணியத்திற்குரிய அண்ணன் இப்றாஹீம் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

3 வாரங்களுக்கு மேலாகியும் பதில் எழுத முடியாத பசுலுல் இலாஹி அதில் இருந்து தப்பிக்க இஸ்லாமிய பிரச்சாரகர்களின் குறைகளை பகிரங்கப்படுத்தலாமா? என்று மெயில் அனுப்பி நழுவி உள்ளார். என்று குற்றம் சாட்டி உள்ளீர்கள். 

இந்தக் குற்றச்சாட்டுடன் கூடிய மெயில் மட்டும்தான் எனக்கு கிடைத்தது. அதற்கு முன்பாக நீங்கள் அனுப்பியதாக குறிப்பிடும் மெயில் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக திட்டமில்லாத இந்த விஷயத்தில், நீங்கள் எனக்கு மட்டும் அனுப்பவில்லை என்று உங்கள் மீது குற்றம் சுமத்தி துணிந்து பொய்யை புனைய மாட்டோம்.

பி.ஜே. வகையறாக என எழுதினால் கொலை செய்து விடுவேன்.

உங்கள் விமர்சனம் எந்த வகையிலும் நமக்கு பாதகமானதாக இல்லை. பாதகமானதாக இருந்தாலும் ஏன் நழுவ வேண்டும்? உண்மையை ஏற்றுக் கொள்வதில்தானே நன்மை இருக்கிறது. 

நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த 3 வார இடைவெளியில்தான் 17-6-04 அன்று மொட்டை மெயில்கள் அனுப்பும் மைக்மாவீரன்களைப்போல் அமானுல்லா என்ற பெயரில் ஒரு வீரன் போன் செய்தான். 

இனி பி.ஜே. வகையறாக என எழுதினால் நீ இருக்கும் இடத்தை தேடி கண்டு பிடித்து கொலை செய்து விடுவேன் என்றான். நான் வேலை செய்கிற இடம் வீடு என எல்லா முகவரிகளையும் கொடுத்து வா என்று சொன்னேன்.

அதற்குப் பிறகுதான் செட்டப் கடிதங்களை அடையாளம் காட்டி பரகத் அலி அவர்களுக்கு 23.6.04 அன்று ஒரு கடிதமும் 27.6.04 அன்று வரட்டி எரிப்பது ஹராம் அது ஊருக்கு அல்ல ”உலவி”க்குத்தான் என்ற தலைப்பில் ஒரு கடிதமும் அனுப்பி உள்ளேன். எனவே நழுவல் நிலையோ பயந்து ஒதுங்கும் நிலையோ நம்மிடம் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 நிமிடம் கரண்ட் இல்லாமல் ஆகி விடுகிறது.

த.மு.மு.க.விலிருந்து விலகியது ஏன்? என்ற தலைப்பில் பேச பி.ஜே.யும் பாக்கரும் தொண்டிக்குப் போனார்கள். இந்த தலைப்பில் பேசுவதற்கு முன் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் பாக்கர் பற்றி வந்துள்ள செய்திக்கு பதில் தாருங்கள். அதற்கு பதில் தந்துவிட்டு த.மு.மு.க.விலிருந்து விலகியது ஏன்? என்ற உங்கள் தலைப்பில் பேசுங்கள் என்று சொன்னதும் நெஞ்சு வலி வந்தது போல் பாக்கர் தன் நெஞ்சில் வைக்கிறார். என்ன ஆச்சு பாக்கர் உங்களுக்கு என்று பி.ஜே. பாக்கரை பிடிக்கிறார். 10 நிமிடம் கரண்ட் இல்லாமல் ஆகி விடுகிறது.

4 மாதங்களுக்கு முன் நாகூரில் இறை நேசன் சொன்னது.

“சத்தி நேசன்” ஈ-மெயில் ஆசிரியர் குழுவில் உள்ள “முற்பகலுக்கு” பாக்கர் என்றாலே பிடிக்காது. அந்த அளவு அவர் மீது பழைய பகை உள்ளது. நெஞ்சு வலி வர மூல காரணமான சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் அது வெளி வரவில்லையே என்று ஆத்திரம் வந்துள்ளது முற்பகலுக்கு. 

எங்கு சொன்னால் இந்தச் செய்தி நம்மை வந்தடையுமோ அங்கும் போய் சொல்லி உள்ளது. கடைசியாக எதை எழுதினால் இந்தச் செய்தி வெளிவரும் என்று யோசித்துள்ளதோ என்னவோ? 

4 மாதங்களுக்கு முன் நாகூர் சென்ற இறை நேசன் அங்குள்ள பள்ளிவாசலில் கூடி இருந்தவர்களிடம் சொல்லிக் காட்டியதை அப்படியே அச்சிடச் செய்து வெளியிட்டு விட்டது. பழைய பாசத்தில் முற்பகலுக்காக பாக்கர் நெஞ்சி வலியை ஒட்டிய செய்தியை கடைசியில் குறிப்பிட்டுள்ளோம்.

வரட்டு கவுரவம் பார்க்காமல் பகிரங்க மன்னிப்பு கேட்போம்.

உங்கள் விமர்சனங்களுக்குரிய விளக்கங்களை பார்ப்பதற்கு முன்னால் நான் எதைக் கூறி நழுவியதாக குற்றம்சாட்டி உள்ளீர்களோ, அந்த கேள்விகளுக்குரிய பதில்களை முதலில் பார்ப்பதுதான் நல்லது. 

ஏனெனில், இஸ்லாமிய பிரச்சாரகர்களின் குறைகளை பகிரங்கப்படுத்தலாமா? என்ற விஷயத்தில் நம் மார்க்கத்தின் நிலை என்ன? என்பதை அறிந்து செயல்படுவோம். 

செய்த விமர்சனங்கள் மார்க்க ரீதியாக சரிதான் என்றால், மார்க்கத்தில் தடை இல்லை என்றால், தூய இஸ்லாத்தை நிலை நாட்ட நமது விமர்சனங்களையும் மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் பிரச்சாரகர்களை அடையாளம் காட்டும் பணிகளையும் தொடர்வோம். 

மார்க்க ரீதியாக தவறு என்றால் விமர்சனத்தை நிறுத்தி விட்டு நடந்தவற்றுக்கு வரட்டு கவுரவம் பார்க்காமல் பகிரங்க மன்னிப்பு கேட்போம் இன்ஷா அல்லாஹ் என்று முடித்திருந்தோம். எனவே அதன் தொடரை முதலில் பார்ப்போம்.

முன்னுதாரணத்தை பார்க்க வேண்டும்.

மார்க்க பிரச்சாரகர்களிலெல்லாம் தலைசிறந்தவர், முதன்மையானவர் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கவே இருக்காது. 

அவர்கள் மூலம்தான் அல்லாஹ் இந்த மார்க்கத்தை நமக்குத் தந்தான். அவர்களிடமிருந்துதான் இந்த மார்க்கத்தின் பிரச்சாரப் பணியே துவங்குகிறது. பிரச்சாரகர்கள் உடைய குறைகளை வெளிப்படுத்தக் கூடாது, அவர்களது தவறுகளை பகிரங்கமாக சுட்டிக் காட்டக் கூடாது, தப்புகளை தட்டிக் கேட்கக் கூடாது என்றால் அதற்குரிய முன்னுதாரணத்தை பார்க்க வேண்டும். 

அந்த முன்னுதாரணத்தை இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையில்தான் பார்க்க வேண்டும். அதைத்தான் ஆதரமாக ஏற்க வேண்டும்.

ஸலாம்.

கண் தெரியாத ஸஹாபியான அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்கள் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். ஒரு நோக்கத்துடன் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பதில் சொல்லவில்லை. இதனை கண்டித்து உடனேயே 80:1,2 ஆகிய வசனங்களை அருளுகிறான் அல்லாஹ்.

சபிப்பு.

உஹது போர்க் களத்திலே பாதிக்கப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதிரிகளைப் பார்த்து “தமது நபியின் முகத்தில் ரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்” என்று கூறினார்கள். இந்த வார்த்தையை ஆட்சேபித்து (துாதரே) அதிகாரத்தில் உமக்கு பங்கில்லை என்று 3:128 வசனத்தை அருளுகிறான்.

சொல்லிக் காட்டியதே இத்தகைய பாதிப்பு என்றால்?

இவற்றை உணர்வு பூர்வமாக புரிந்தால்தான் இவற்றின் தாக்கங்களை புரிய முடியும். நாம் ஒருவரின் ஸலாமுக்கு அது மாதிரி பதில் சொல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். இதை இரண்டு பேர் முன்பாக என்னங்க அவர் ஸலாம் சொல்கிறார் நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்களே? என்று சொல்லிக் காட்டினாலே போதும் எவ்வளவு வெட்கப்படுவோம், வேதனைப்படுவோம், நமது முகம் எப்படி மாறும்? இதை எவ்வளவு பெரிய கவுரவப் பிரச்சனையாக இமேஜ் பாதிப்பாக கருதுவோம்? 2 பேர் அறிய சொல்லிக் காட்டியதே இத்தகைய பாதிப்பு என்றால்? கண்டித்துப் பேசினால் நிலமை எப்படி இருக்கும்?

தாங்க முடியாத துன்பம் ஏற்படும்போது மனிதர்கள் கடுமையான வார்த்தைகளை கூறி விடுவதுண்டு. உஹது போர்க்களத்திலே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது சாதாரண பாதிப்பா? 

நபி (ஸல்) அவர்கள் தலைக் கவச சங்கிலிகள் பற்களில் மாட்டிக் கொள்ளும் அளவில் முகத்தில் வெட்டப்பட்டு பற்கள் உடைக்கப்பட்டது. தாடையும் பிளக்கப்பட்டது. அவர்களது முகத்திலிருந்து ரத்தம் பீறிட்டு ஓடியது. அந்த மாதிரி பாதிப்பான நேரத்தில் நாம் செய்யும் தவறை யாராவது சொல்லிக்; காட்டினால் ஜீரணிப்போமா? நமது மன நிலமை எப்படி இருக்கும்?

சொல்லிக் காட்டவில்லை.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் சொல்லிக் காட்டவில்லை. கண்டித்துக் கூறுகிறான். சாதாரணமான கண்டிப்பா? ஸலாமுக்கு பதில் சொல்லாத நிகழ்ச்சியைக் கூட நீர் கடுகடுத்தீர், அலட்சியம் செய்தீர் என்று நேரடியாக சொல்லவில்லை. 

நாம் ஒருவரிடம் கோபமாக உள்ள நிலையில் அவரிடம் நேரடியாக பேச விரும்பாமல் அவரது செயலை வெறுத்து கண்டனத்தை பிறரிடம் கூறி வெளிப்படுத்துவோம். அது மாதிரி இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார் என்று 3 வது ஆளிடம் சொல்லிக் காட்டுவதுபோல் ஆயத்து இறக்கி தனது கடுமையான கண்டிப்பை காட்டி உள்ளான் அல்லாஹ்.

அவர் நல்ல பேச்சாளர் அவரை மாதிரி யார் பேச முடியும். அவருக்குத்தான் கூட்டம் கூடுகிறது. அவரது இமேஜை கெடுத்தால் பிரச்சாரப்பணி பாதிக்கும். அவரது பேச்சை கேட்டு வந்தவர்களும் அவரைப் பற்றிய விமர்சனத்தை அறியும்போது திரும்ப போய் விடுவார்கள் என்கின்றனர். இது பற்றி மார்க்கத்தின் நிலை என்ன?

நபிக்காகக் கூட இஸ்லாத்தில் இருக்கக் கூடாது.

முஹம்மத், தூதரே தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா?.. என்று அல் குர்ஆன் 3:144. வசனத்தில் அல்லாஹ் கேட்கிறான். 

இந்த வசனத்தின் மூலம் நபிக்காகக் கூட இஸ்லாத்தில் இருக்கக் கூடாது என்பதை திட்டவட்டமாகக் கூறி அல்லாஹ்வுக்காகத்தான் இஸ்லாத்தில் இருக்க வேண்டும் என்பதையும் பிரகடனப்படுத்தி உள்ளான் அல்லாஹ்.

நபிக்காகக் கூட இஸ்லாத்தில் இருப்பதை விரும்பாத அல்லாஹ் சாதாரண மனிதர்கள் மீது உள்ள பிரியத்தால், அதுவும் விபச்சார பொய்யர்கள் மேல் உள்ள பிரியத்தால் இஸ்லாத்தில் இருப்பதை விரும்புவானா? சாதராண பொய்களா? விபச்சார பொய்கள்.

ஒருவனை ஏமாற்ற ஒருவன் ஒரு முறை பொய் சொல்வதையே மனித உள்ளம் உள்ளவர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். 

ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஏமாற்ற எப்பொழுதுமே பொய் சொல்வதையே மூலதனமாகக் கொண்டு ஒன்றுக்கு பல முறை பிரிவினைகளை ஏற்படுத்தி, விபச்சார பொய்கள் மூலம் அந்த பிரிவினைகளை நியாயப்படுத்தி சுயலாபம் அடைந்து வருபவர்களை மனித உள்ளம் உள்ளவர்கள் ஏற்பார்களா? 

அவர்களை மனிதர்களே ஏற்காத போது, அந்த பொய்யர்களுக்காக இஸ்லாத்தில் இருப்பதை அல்லாஹ் ஏற்பானா?

நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.

ஒரு நிறுவனத்திலே மேனேஜராக உள்ளவர் செய்த தவறுக்காக ஏனைய பணியாட்கள் அறியும் வண்ணம் அதன் உரிமையாளர் கண்டிப்பதை ஏற்பாரா? எல்லாருக்கும் தெரியும் வண்ணம் என்னை கண்டித்தால் அவர்கள் எப்படி என் சொல்லை கேட்பார்கள் என்பார். 

மற்றவர்களும் மேனேஜர் கூற்றை சரி காண்பார்கள். மேனேஜர் செய்யாத தவறை சொல்லி இந்த மேனேஜர் பொய் சொன்னால் இவரை டிஸ்மிஸ் செய்து விடுவேன் என்று கூறினால்? சொல்லவும் வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் இமேஜ் பாதிக்குமே என்பதை பொருட்படுத்தாமல் செய்த தவறுகளைத்தான் மேற்கண்ட ஆயத்துகளில் கடுமையாக கண்டித்தான் என்றால் செய்யாத தவறு பற்றி சொல்லிக் காட்டும்போது உள்ள வசனத்தைப் பாருங்கள். ... 

சில சொற்களை இவர் நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் அவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.. என்று 69:44,45வது வசனங்களில் சொல்லிக் காட்டி உள்ளான்.

யாரை கண்டிக்கிறான்?

இவ்வாறு அல்லாஹ் யாரை கண்டிக்கிறான்? தண்டிப்பேன் என்கிறான்? யாரை அவன் தேர்வு செய்து வேதத்தை அருளி விளக்கத்தையும் கொடுத்து முழுமைப்படுத்தப்பட்ட இஸ்லாத்தின் முதல் பிரச்சாரகராகவும் இறுதித் தூதராகவும் ரஹ்மதுல் ஆலமீனாகவும் ஆக்கினானோ அந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களைத்தான் கண்டிக்கிறான், தண்டிப்பேன் என்கிறான். அவர்களிடம் ஏற்பட்ட எந்த தவறையும் மூடி மறைக்கவில்லை.

சாதாரண கண்டிப்பா?

இவ்வாறு கண்டித்துள்ள அல்லாஹ் தனது தூதரின் இமேஜ் பாதிக்காத வண்ணம் ரகசியமான வஹி மூலம் சுட்டிக் காட்டி இருக்கலாம். இதன் மூலம் பிரச்சாரகர்களின் தவறுகளை அவர்கள் இமேஜ் பாதிக்காத வண்ணம் ரகசியமாக சொல்லிக் காட்ட வழி காட்டி இருக்கலாம். 

அப்படிச் செய்யாமல் கண்டித்துள்ளான். அதுவும் சாதாரண கண்டிப்பா? அந்த கண்டிப்பை கியாமத் நாள் வரை உள்ளவர்கள் அறியும் வண்ணம் குர்ஆனில் அல்லவா இடம் பெறச் செய்து விட்டான். அல்லாஹ்வால் இஸ்லாமிய பிரச்சாரத்திற்கென்று தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட தூதராக இருந்தும் அவர் இமேஜ் பாதிக்கக் கூடாது என்று பார்க்கவில்லை. எதையும் மூடி மறைக்கவில்லை.

பகிரங்கமாகத்தான் கண்டிக்க வேண்டும்.

சாதாரணமானவர்கள் செய்யும் ஒரு தவறை மக்கள் தவறு என எளிதில் விளங்கி விடுவார்கள். அதே தவரை மார்க்கப் பிரச்சாரகர்கள் அறிஞர்கள் என்று அறியப்பட்டவர்கள் செய்யும்போது தவறு என்று விளங்காமல் அதுதான் மார்க்கம் என்று விளங்கிக் கொள்கிறார்கள். 

அதன் வெளிப்பாடுதான் தவறுகள் சுட்டிக் காட்டப்படும்பொழுதெல்லாம் அந்த அறிஞரே அப்படித்தானே செயல்பட்டார் அவருக்கு தெரியாததா உங்களுக்கு தெரிந்து விட்டது என்று மக்களால்   கேள்விகள் கேட்கப்படுகின்றன.

எனவே நடைமுறை ஏற்படுத்தியுள்ள விளைவுகளைப் பார்த்தாலும் மார்க்க அறிஞர்கள் என்று பிரபலமாகி விட்டவர்களின் தவறுகளை பகிரங்கமாகத்தான் கண்டிக்க வேண்டும் என்பதுதான் சரியான நிலை. 

மார்க்க ரீதியாக பார்த்தாலும் பிரச்சாரகர்களிடம் உள்ள குறைகளை போட்டு உடைக்கத்தான் வேண்டும் என்பதற்குத்தான் 80:1-2, 3:128 ஆகிய ஆயத்துகள் மட்டுமன்றி இன்னுமுள்ள ஆயத்துகளும் ஹதீஸ்களும் ஆதாரமாக உள்ளன.

இறையச்சமுடைய முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள்.

எனவே இதுவரை நாம் செய்த விமர்சனங்களுக்கு மார்க்கத்தில் தடை இல்லை என்பது மட்டுமல்ல மார்க்க ரீதியாக சரிதான் என்பதற்குரிய ஆதாரங்களையும் பார்த்து விட்டோம். 

எனவே தூய இஸ்லாத்தை நிலை நாட்ட நமது விமர்சனங்களையும் மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் பிரச்சாரகர்களை அடையாளம் காட்டும் பணிகளையும் தொடர்வோம். 

இதன் மூலம் அவர்களோ, அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களோ விளங்கி திருந்தினால் அல்லாஹ்வின் தண்டனைகளிலிருந்து தப்புவார்கள். அந்த 2 சாராரும் திருந்தினாலும் திருந்தாவிட்டாலும் நமது விளக்கங்களை காணும் இறையச்சமுடைய முஸ்லிம்கள் இனிமேல் அந்த வழி கெடுக்கும் கூட்டத்தாரிடம் போய் வீழ்ந்து ஏமாற மாட்டார்கள். இதுவே நமது வெளியீடுகளுக்கு கிடைத்த பயன்மிக்க வெற்றிகளாகும்.

ஷியாயிஸம்.

பி.ஜே. வகையறாக்களுக்கு ஆபத்தான காலத்தில் ஷியாக்களும் முஸ்லிம்கள்தான் என்று அங்கீகரித்து ஷியாக்களை அணி சேர்த்திட்டவர்கள் பி.ஜே.யிஸத்தினர். அந்த பி.ஜே.யிஸத்தினர் இப்பொழுது “ஷியாயிஸம்” என எழுதி அது ஒரு தனி மதம் என்று சொல்லலாம் என்றும் விமர்சித்துள்ளனர். 

பி.ஜே.யிஸத்தினர் தனி மதம் என்று குறிப்பிட்டுள்ள ஷியாக்கள் எப்படி தோன்றினார்கள்? என்பதைவிட எப்படி வழி கெட்டார்கள்? எப்படி வழி கெடுக்கப்பட்டார்கள்? என்பதைத்தான் மக்களுக்கு நினைவூட்டவும் தெரியாதவர்களுக்கு சொல்லிக் காட்டவும் வேண்டிய காலத்தில் உள்ளோம்.

ஷியாயிஸத்தை உருவாக்கியவர்கள்.

ஒரு மனிதர் மீது கொண்ட அளவுக்கு அதிகமான பிரியம்தான் அவர் பற்றி அளவுக்கதிமாக எப்படி புகழ்ந்து கூறினாலும் சிந்திக்காமல் அப்படியே ஏற்க வைத்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களிடம் பயனடையும் உழைத்து சாப்பிடாத கூட்டம் ஒவ்வொரு காலத்திலும் இருந்தே வந்துள்ளது. அந்தக் கூட்டம்தான் அலி(ரலி) பற்றி ஹதீஸ்களை இட்டுக்கட்டியது. ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர்கள் பாமரர்கள் அல்ல. பாமரர்களுக்கு மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றும் சிந்தனை வராது. மார்க்கம் படித்த பண்டிதர்களுக்குத்தான் அந்த மாதிரி சிந்தனை வரும். மார்க்கம் படித்த பண்டிதர்கள்தான் ஹதீஸ்களை இட்டுக்கட்டி ஷியாயிஸத்தை உருவாக்கினார்கள்.

பி.ஜே.யிஸம்.

அதே மாதிரி மார்க்கம் படித்த பண்டிதர்கள்தான் இன்று பி.ஜே.யிஸம் உருவாக எப்படியெல்லாம் இட்டுக் கட்ட முடியுமோ அப்படியெல்லாம் இட்டுக் கட்டி வருகிறார்கள். எனவே ஷியா மாதிரி இன்னொரு மதமான பி.ஜே. மதம் தமிழகத்தில் உருவாகாமல் இருக்க பி.ஜே.யிஸத்தை அடையாளம் காட்டும் எமது பணியை தொடர்வோம். இன்ஷா அல்லாஹ். இப்பொழுது உங்களின் கேள்விகளைப் பார்ப்போம்.

பி.ஜே.யை பொய்ப்படுத்த பிரசுரமா?

பி.ஜே.யை பொய்ப்படுத்த பிரசுரம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது பி.ஜே. சொல்வதையெல்லாம் பொய்ப்படுத்த வேண்டும் என்பதே உங்கள் பிரதான நோக்கமாக ஆகிவிட்டது. என்று எழுதியுள்ளீர்கள். இவ்வாறு எழுதியுள்ள உங்கள் கடிதத்தின் துவக்கமே பி.ஜே. அவர்களை பொய்படுத்தித்தான் உள்ளது.

லுஹா வந்தால்தான் தருவேன் என்றார்களா?

சம்சுல்லுஹாவை துபையில் யாருக்குத் தெரியும்? வாழ்வுரிமை மாநாட்டுக்கு யாரும் பணம் தரமாட்டேன் என்று சொன்னார்களா? லுஹா வந்தால்தான் தருவேன் என்றார்களா? 

மஸ்ஜிதுர்றஹ்மான் வசூலுக்கு வரும் முன் த.மு.மு,க. சார்பில் வந்து அறிமுகம் ஆகி விட்டால் மஸ்ஜிதுர்றஹ்மான் வசூல் எளிதாக இருக்கும் என்று உங்கள் சுயநலத்துக்காக வாழ்வுரிமை மாநாட்டு வசூலுக்காக என்று லுஹாவை துபை வரவழைத்தீர்கள். 

அவரா கஷ்டப்பட்டு கேம்கேமாக போய் வசூல் செய்தார். த.மு.மு.க. தெண்டர்கள் வசூல் செய்தார்கள்.அவரை ராஜபோக மரியாதையுடன் அரபி சாப்பாடு உபசரிப்புடன் பைசலில் தங்க வைத்திருந்தீர்கள். இது உண்மையா பொய்யா... என்று எழுதி உள்ளீர்கள்.

லுஹாவுக்கு த.மு.மு.க.வில் எந்த வேலையும் இல்லை.

வாழ்வுரிமை மாநாட்டு வசூலுக்காக தாயகத்திலிருந்து ஒருவர் வரவேண்டும் என்று பி.ஜே. அவர்களிடம் நான் சொன்னதும், “யாரும் வர முடியாது எல்லாரும் மாநாட்டு டைட் ஒர்க்கில் உள்ளோம்” என்றார். 

இது எங்களுக்குத் தெரியும். லுஹாவைத்தான் அழைக்க விரும்புகிறோம். மாநாட்டை ஒட்டி லுஹா அறிமுகம் ஆகி விட்டால் மஸ்ஜிதுர்றஹ்மான் வசூலுக்கு வரும்போது எளிதாக இருக்கும் என்றுதான் இந்த திட்டம் என்றேன். 

”லுஹா என்றால் பிரச்சனை இல்லை. லுஹாவுக்கு த.மு.மு.க.வில் எந்த வேலையும் இல்லை. அவரை வைத்து த.மு.மு.க.வுக்கு இங்கு எந்த பயனும் இல்லை” என்று கூறிய பி.ஜே, “பொதுவாக ஒரு பிரச்சாரகரை தலைமையிலிருந்து அனுப்புங்கள் என்று நீங்கள் எழுதுவதுபோல் பேக்ஸ் அனுப்புங்கள்” நான் த.மு.மு.க. தலைமை முடிவுப்படி லுஹாவை அனுப்புவதுபோல் ஏற்பாடு செய்கிறேன் என்றும் கூறினார்.

எந்த அளவுக்கு ராஜபோக மரியாதை?

பி.ஜே. சொன்னபடி நாம் அனுப்பிய செட்டப் பேக்ஸ் பைலை இணைத்துள்ளேன் பார்த்துக் கொள்ளவும். துபை வந்த லுஹா மாநாட்டு வசூலுக்காக எவ்வித கஷ்டநஷ்டமும் படவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் ராஜபோக மரியாதையுடன் அரபி சாப்பாடு உபசரிப்புடன்தான் இருந்தார். 

எந்த அளவுக்கு ராஜபோக மரியாதை? அவர் காட்டி உள்ள கணக்குப்படி அவர் ஒப்புக் கொண்டுள்ள ஒரு டெலிபோன் நம்பர் மூலம் மட்டும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அடுத்தவன் பணத்தில் போன் பேசி உள்ளார். அது மட்டுமா? த.மு.மு.க. சார்பில் வந்துவிட்டு தனக்கான தனி வசூலில் ஈடுபட்டு சுயலாபமும் அடைந்தார். இந்த உண்மையைத்தான் நீங்கள் எழுதி உள்ளீர்கள்.

இவர் எப்படிப்பட்ட 'தாஇ'

நீங்கள் எழுதி உள்ள இந்த உண்மைக்கு மாற்றமாகத்தான் லுஹா த.மு.மு.க.வுக்காக வெளிநாட்டுக்கு வந்து தியாகம் செய்துள்ளவர்போல் பி.ஜே. இட்டுக் கட்டி பேசியுள்ளார். 

பி.ஜே. இட்டுக் கட்டி பேசியுள்ள மாதிரி மாநாட்டுக்கு பணம் வேண்டும் என்பதற்காக த.மு.மு.க. தலைமையினர் அவர்களாக லுஹாவை தேர்வு செய்து வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. 

அவர் 'தாஇ' என்ற செல்வாக்கை பயன்படுத்தினார் என்றெல்லாம் பி.ஜே. பேசி உள்ளார். இவர் எப்படிப்பட்ட “தாஇ” என்றால் ரத்த தானம் சம்பந்தமான மஸாயில் பிரச்சனை தெரிந்து கொள்ளத்தான் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் போன் பேச வேண்டியதாயிற்று என்று விளக்கம் சொன்ன விபரமுள்ள? “தாஇ”. 

ஊரான் பணம் என்றால் ஊதாரித்தனமாக செலவு செய்வோம் என்ற அணியில் உள்ள இந்த “தாஇ“ த.மு.மு.க. மூலம்தான் யு.ஏ.இ.ல் பிரபலமானார். இது சம்பந்தமாக பி.ஜே. சி.டி.களில் சொல்லி உள்ளவை அனைத்தும் பொய்களே.

இரட்டிப்பு கடமை.

எனவே நீங்கள் எழுதி உள்ள உண்மை பி.ஜே.யை பொய்படுத்துகிறது. அதற்காக இப்பொழுது பி.ஜே. சொல்வதையெல்லாம் பொய்ப்படுத்த வேண்டும் என்பதே உங்கள் பிரதான நோக்கமாக ஆகிவிட்டது என்று உங்களைப் பார்த்து சொல்ல முடியுமா? 

அதுபோல்தான் நான் எழுதியுள்ள உண்மைகளும் உள்ளன. உங்களுக்குத் தெரிந்த உண்மையைக் கூறியதன் மூலம் பி.ஜே. கூறியுள்ளவற்றில் உள்ள பொய்களை நீங்கள் அடையாளம் காட்டி உள்ளீர்கள். அதுபோல் அடையாளம் காட்ட வேண்டிய இரட்டிப்பு கடமை என் போன்றவர்களுக்கு உள்ளது.

100க்கு 200 சதவிகிதம்.

காரணம் அபு அப்துல்லாஹ் மோசடி செய்துள்ளாரா? ஆமாம் என்ன ஆதாரம்? பி.ஜே. சொல்லி விட்டார். 

புரட்சி மின்னல் அப்துல்லாஹ் சரி இல்லையா? என்ன ஆதாரம்? பி.ஜே. சொன்னார். 

எஸ்.ஹைதர் அலி கம்யூனிஸ்டு கொள்கை உடையவர். என்ன ஆதாரம்? பி.ஜே. சொன்னார். 

சீனி நைனா முஹம்மது, கோவை முஸ்தபா கமால், மைதீன் உலவி, மணப்பாரை ஹனீபா,  குணங்குடி ஹனீபா, அப்துர் ரவூப் பாகவி இப்படியாக யாரைப் பற்றி எந்த குற்றச்சாட்டுகளாக இருந்தாலும் சரி அண்ணன் சொல்லுக்கு மறு சொல் இல்லை என நம்பினோம். 

எந்த அளவுக்கு என்றால் 100க்கு 200 சதவிகிதம் பி.ஜே.யை நம்பக் கூடியவர் என்று நண்பர்கள் விமர்சிக்கும் அளவுக்கு நம்பினோம். நம்பியதோடு நின்று விடாமல் அவர் சொன்னவற்றை அப்படியே பரப்பினோம்.

அசத்தியம் அழிந்தே போய்விடும்.

பி.ஜேயிடமுள்ள குறைகளை சுட்டிக் காட்டியதால்தான் ஒவ்வொருவரைப் பற்றியும் பி.ஜே. பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார் என்ற உண்மையை அறிந்து விட்டோம். 

இந்த உண்மையை அறிந்து விட்ட பிறகு ஏற்பட்டு விட்ட கடமையைச் செய்யும்போது பி.ஜே. பொய்யராகிறார். உண்மைகள் வரும்போது பொய்கள் தானாக பொய்களாகி விடுகின்றன. யாரும் பொய்ப்படுத்தத் தேவை இல்லை. 

நம் மூலம் வெளிவரும் உண்மைகளால் பி.ஜே.யும் பி.ஜே. தரப்பினரும் தானாக பொய்யர்களாகிறார்கள். இதைத்தான் திருமறை, சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போய்விடும் என்கிறது. 17:81

இதுதான் இஸ்லாம் கூறும் நடுநிலையா?

சிலர் எம்மைப் பார்த்து நீங்கள் பி.ஜே. தரப்பு குறைகளை அடையாளம் காட்டுவது இன்னொரு தரப்புக்கு சாதகமாக உள்ளது. என்ன இருந்தாலும் பி.ஜே. தரப்பு தவ்ஹீது பிரச்சாரம் செய்கிறார்கள். எனவே நாங்கள் ஒதுங்கி இருப்பதுபோல் நீங்களும் நடுநிலையாக ஒதுங்கி இருங்கள் என்கிறார்கள். நடுநிலை என்பதற்கு அவர்கள் கூறும் அளவு கோல் என்ன? உண்மைக்குப் புறம்பான தரப்பு பற்றிய எந்தக் குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டாம் என்பதாகும். இதுதான் இஸ்லாம் கூறும் நடுநிலையா?

ஆயத்துகளுக்கு என்னதான் அர்த்தம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்... (அல் குர்ஆன் 4:135) 

பி.ஜே. நல்ல பேச்சாளர் என்பதற்காக அவர் மீது நமக்குள்ள பாசத்தால் நீதியை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆயத்துக்குரிய அர்த்தமா?

... ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 5: 8) 

த.மு.மு.க.வில் உள்ளவர்கள் மீது நமக்கு அநியாயமாக ஏற்படுத்தப்பட்டுள்ள வெறுப்பால் அவர்கள் மீது கூறப்படும் அபாண்டங்களை கண்டு கொள்ளக் கூடாது என்பதா இந்த ஆயத்துக்குரிய அர்த்தம்?

வியாபாரம் செய்யவும் பப்ளிகேஷன் நடத்தவும்தானா?

நீதியை நிலைநாட்டுதல் சம்பந்தமாக உள்ள இது போன்ற ஆயத்துகளுக்கு என்னதான் அர்த்தம். ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே நீதி 4:135, எதிரிகளுக்கும் நீதி செலுத்துதல் 5:2,5:8,60:8, நீதியை நிலைநாட்ட வேண்டும் 4:58, 6:152, 7:29, 16:72, 16:90, 42:15 என்று அச்சிட்டு வியாபாரம் செய்யவும் பப்ளிகேஷன் நடத்தவும்தானா?

எவ்வளவு பெரிய அறிவாளிகள்?

எந்த இரண்டு தரப்புகளாக இருந்தாலும் அநியாயத்தில் உள்ள தரப்பினரை அடையாளம் காட்டும்போது அது நியாயாத்தில் உள்ள இன்னொரு தரப்பினருக்கு சாதகமாகத்தான் இருக்கும். 

பி.ஜே. மாதிரி ஜவாஹிருல்லாஹ் தவ்ஹீது பிரச்சாரம் செய்வாரா? அப்படியே பிரச்சாரம் செய்வதாக இருந்தால் பி.ஜே. மாதிரி பேச முடியுமா? தப்ஸீர் பணி செய்வாரா? மாற்றுமத நிகழ்ச்சி நடத்துவாரா? என்றும் சிலர் சம்பந்தமில்லாமல் கேட்கின்றனர். 

இந்த மாதிரியான கேள்விகள் கேட்பதன் மூலம் அவர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகள்? என்று தங்களை அடையாளம் காட்டி உள்ளார்கள். இந்த அறிவாளிகள் மாதிரிதான் இன்னொரு அறிவாளியும் எழுதி உள்ளார்.

அபு அப்துல்லாஹ்விடம் பணியாற்றியதிலிருந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் துனை பொதுச்செயலாளராக பொருப்பேற்றதுவரை நீங்கள் ஏற்கனவே ஒத்துக்கொண்ட அவரின் மார்க்க விரோதமில்லா சத்தியப் பிரச்சாரத்தை ஒடுக்க இன்றுவரை தமிழகத்தில் எந்த தீய சக்தியாலும் முடியவில்லை. முடியாது. இப்படி சம்பந்தமில்லாமல் எழுதி உள்ள அறிவாளி வேறு யாருமல்ல பி.ஜே. கலைக்குழுவைச் சேர்ந்த அதிரை பாரூக்தான்.

திசை திருப்புபவர்கள் பொய்யர்கள்தான்.

அவரது முதல் கடிதத்தை சமாதானப் புறா வேடமிட்டு எழுதினார் அடுதடுத்த கடிதங்களின் மூலம் தன்னை பி.ஜே. கலைக்குழு உறுப்பினர் என்று தெளிவாக அடையாளம் காட்டி உள்ளார். இப்பொழுது சமுதாயத்தின் முன் வைக்கப்பட்டுள்ள பிரச்சனையில் எந்த தரப்பினர் அநியாயத்தின் பக்கம் உள்ளனர் இதைத்தான் நாம் அடையாளம் காட்டுகிறோம். பிரச்சனை பிரச்சாரப் பணிகள் பற்றியது போலவும் கொள்கை சம்பந்தப்பட்டது போலவும் திசை திருப்புபவர்கள் பொய்யர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.

நெல்லை மாவட்டத்தில் த.மு.மு.க.

லுஹா துபை வந்தது பற்றி பொய்களை அவிழ்த்துவிட்டுள்ள பி.ஜே. நெல்லை மாவட்டத்தில் த.மு.மு.க. வளர்ச்சிப் பணிகளில் லுஹாவும் தென்காசி சுலைமானும் கிராமம் கிராமமாக பாடுபட்டார்கள் என்றும் சி.டி.களில் பொய்களை அவிழ்த்துவிட்டுள்ளார். 

த.மு.சா. காஜாமைதீன் அவர்களிடம் துவங்கி இன்று வரை அடுத்தடுத்து பொறுப்பேற்று செயல்பட்டு வரும் பொறுப்பாளர்களின் சீரிய களப்பணிகள்தான் நெல்லை மாவட்டத்தில் த.மு.மு.க. கிராமம் கிராமமாக வளர்ந்ததற்கு காரணமே தவிர இந்த சுயநலமிகள் அல்ல.

இதை மாவட்ட மக்கள் நன்கு அறிவார்கள். இதற்கு ஆதாரங்களாக பி.ஜே. ஆசிரியராக பணியாற்றிய உணர்வு இதழ்கள் மட்டுமல்ல மற்ற தினசரிகளின் நெல்லை மாவட்ட பதிப்புகளும் ஆதாரங்களாக உள்ளன. பொதுமக்களுக்கும் தெரிந்த பகிரங்கமான ஆதாரங்கள் உள்ள இந்த விஷயத்திலேயே துணிந்து கூடி இருந்தவர்கள் காதில் முழம் முழமாக பூ சுற்றி உள்ளார் என்றால் மற்ற விஷயங்களில் பி.ஜே. பூ சுற்றி உள்ளது பற்றி கூறவும் வேண்டுமா?

த.மு.மு.க.வில் லுஹாவும் சுலைமானும்.

கொலை வழக்கில் சிறை செல்லும் காலம் வரை லுஹா த.மு.மு.க. மேடையில் பேசாமல் ஓடி ஒழியக் கூடியராகத்தான் இருந்தார். அதற்குப் பிறகும் கூட மேடை போட்டால் வந்து விளம்பரமாகிவிட்டு போகக்கூடியவராகத்தான் இருந்துள்ளார். 

அதுபோல் தென்காசி சுலைமானும் தனக்கு ஜாக்கில் கடன் கிடைக்கவில்லை என்ற நிலையில்தான் த.மு.மு.க.வுக்கு வந்தார். லுஹாவும் சுலைமானும் த.மு.மு.க. மூலம் பயன் அடையக் கூடியவராக இருந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.

லுஹாவுக்கு உதவ மறுத்ததன் பின்னணி என்ன?

நீ த.மு.மு.க.வில் இருந்தால் சம்பளம் தரமாட்டேன், மஸ்ஜிதுர்றஹ்மானுக்கு உதவ மாட்டேன் என்று சவூதி அரபி சொன்னார் என்ற செய்தியை லுஹா பரப்பி வருகிறார். இதன் உண்மை நிலை மற்றவர்களுக்குத் தெரியாது என்பதால் இதைச் சொல்லியே தன்னை த.மு.மு.க.வின் தியாகியாக சித்தரித்து வருகிறார். 

இந்தியாவுக்கு பல தடவை வந்து பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்த அந்த அரபி இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் அமைப்புகளை ஆதரிக்கக் கூடியவராகவே இருந்துள்ளார். அவர் லுஹாவுக்கு உதவ மறுத்ததன் பின்னணி என்ன?

ஷெய்கு ஜைனுல் ஆப்தீன் தலைமையில் செய்யப்படும் பணிகள்.

வெளிநாட்டு நிறுவனங்களிடமோ வெளிநாட்டவர்களிடமோ பண உதவி வாங்கக் கூடாது என்ற கொள்கை உடையவர்போல் தன்னை அடிக்கடி விளம்பரப்படுத்திக் கொள்ளும் பி.ஜே.யின் உத்தரவுப்படி அஹ்மது அல் அஹ்மது, சுலைமான் குனைனி போன்ற வெளிநாட்டவர்களிடம் உதவி கேட்டு லுஹா அரபியில் கடிதம் எழுதினார். 

இது ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உட்பட த.மு.மு.க. தலைமைப் பொறுப்பாளர்கள் யாருக்கும் தெரியாமல் எழுதப்பட்ட கடிதமாகும். அதில் ஷெய்கு ஜைனுல் ஆப்தீன் தலைமையில் செய்யப்படும் பணிகள் என்று லுஹா அரபியில் எழுதி பண உதவி கேட்டிருந்தார். அதில் குறிப்பிட்டுள்ள பணிகளைப் பார்த்து விட்டுத்தான் அஹ்மது அல் அஹ்மது ஜைனுல் ஆப்தீன் தலைமையை விட்டு விலகுமாறு வற்புறுத்தி கமாலுத்தீன் மதனியை அமீராக ஏற்று செயல்படு என்றார்.

நாமாக சொல்லவில்லை, அவர்கள்தான் சொல்ல வைக்கிறார்கள்.

இந்தக் கடிதம் யு.ஏ.இ. வழியாக ஒருவர் மூலம் போஸ்ட் செய்யப்பட்டது. ஒருவர் மூலமாக அனுப்பப்பட்ட அந்தக் கடிதம் போஸ்ட் செய்யப்படும்பொழுது நான் பார்க்கும் சூழல் ஏற்பட்டது. 

அது பற்றி லுஹாவிடம் கேட்டபோதுதான் அரபியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் உள்ள விபரத்தைக் கூறி, பி.ஜே. விருப்பப்படி எழுதப்பட்டதாகக் கூறினார். 

இதை மறுத்தால், இப்பொழுது முபாஹலா பண்ணலாம் என்ற கொள்கையில் உள்ள லுஹா, பி.ஜே. விருப்பப்படி அரபிகளிடம் உதவி கேட்டு அரபியில் கடிதம் எழுதவில்லை என்று மறுத்து முபாஹலா பண்ணட்டும். 

இதையெல்லாம் நாமாக சொல்லவில்லை, தேவையில்லாமல் பொய்களை அவிழ்த்துவிடுவதன் மூலம் அவர்கள்தான் சொல்ல வைக்கிறார்கள். (இப்பொழுது வெளி நாட்டு பணத்திற்காக, இறைநேசன் உம்ரா பெயரால் சவூதி பயணம் செல்ல வேண்டும் என்று சத்திய நேசன் ஆசிரியர் குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.)

எனது சுயநலம் இல்லை.

லுஹாவை வரவழைக்க முடிவு செய்ததை எனது சுயநலம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மஸ்ஜிதுர்றஹ்மான் வசூல் எளிதாக இருக்கும் என்பதற்காக என்று நீங்கள் எழுதி உள்ளதே அதற்கு பதில். எனவே அதில் எனது சுயநலம் இல்லை மஸ்ஜிதுர்றஹ்மான் நலன்தான் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒழுங்காக வந்து கொண்டிருந்த அல்முபீன் ஆசிரியரை மைதீன் உலவியை நீக்க பி.ஜே. லுஹா சொன்னதும் பொய்க் காரணம் கூறி முகைதீன் உலவியை நீக்கினீர்களா இல்லையா? இந்த பாவத்தில் உங்களுக்கு எவ்வளவு பங்கு? இதற்காக எத்தனை விருந்துடன் கூடிய கூட்டம் நடத்தி துபை ஐ.ஏ.ஸி யில் உள்ளவர்களை சரி கட்டினீர்கள்? என்று கேட்டுள்ளீர்கள்.

(மைதீன்) உலவியை எடுத்து விடுங்கள்.

“அல்ஜன்னத்தில் எழுதுவதை நிறுத்திவிட்ட பி.ஜே. அல்முபீனில் எழுத விரும்புகிறார்” என்று லுஹா சொன்னார். “எழுதட்டும்” என்றேன். (மைதீன்) உலவியையும் ஹனீபாவையும் நீக்கி விட வேண்டும்| என்றார். ஏன்? என்றேன் 

“அப்படித்தான் அண்ணன்(பி.ஜே.) விரும்புகிறார் நீங்கள் போன் போட்டு பேசுங்கள்” என்றார். பி.ஜே. இடம் பேசினேன். (மைதீன்) “உலவியை எடுத்து விடுங்கள் என்றார். 

(முகைதீன்) உலவி ஆசிரியராக இருக்கவே நீங்களும் எழுதுங்கள் என்றேன். சாத்தியமில்லை என்றார். 1991ல் நீங்கள்தானே அவர் ஆசிரியராக இருக்க நான் எழுதுகிறேன் என்றீர்கள் என்றேன். சரிபட்டு வராது நாம எழுதுவதை திருத்தம் பண்ணுவார் என்றார். 

அப்படியானால் புதுப் பத்திரிக்கை துவங்குவோம் நான் பொருளாதார ஏற்பாடு செய்கிறேன் என்றேன். புதுப் பத்திரிக்கை வேண்டாம். அது விளம்பரமாக நாள் ஆகும். பத்திரிக்கைகள் எண்ணிக்கை கூடினால் மக்களுக்கும் பலுவாக இருக்கும் என்றார்.

வெறி உணர்வில் திட்டமிட்டு செயல்படுபவர்.

எனவே (முகைதீன்) உலவி இடம் நான் பேசுகிறேன் என்றேன். இப்பொழுது அவர் வியாபாரி ஆகிவிட்டார். கொள்கை உறுதி இல்லை. நமது எழுத்தில் திருத்தம் செய்வார் எனவே சரிபட்டு வராது. நாம் எழுதுவோம். பத்திரிக்கையை நல்ல தரமாக தலைப்பு வாரியாக முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் வெளியிடுவோம் என்றார். 

எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும் அது முழுமையாக விரிவாக விலாவாரியாக விளக்கப்பட வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கோரிக்கையாகும். 

தன்னை எதிர்த்தவர்களுக்கு எதிராக எல்லா வழியிலும் கெடுதல் செய்து அவர்களை கொள்கை விரோதிகளாக சித்தரித்து அடியோடு ஒழித்து விடவேண்டும் என்ற வெறி உணர்வில் திட்டமிட்டு செயல்படுபவர் பி.ஜே. என்பதையும் மைதீன் உலவிக்கு கெடுதல் செய்யும் நோக்கில்தான் அல் முபீனில் எழுத விரும்புவதுபோல் காட்டி உள்ளார் என்பதையும் அப்பொழுது நாம் அடையாளம் கண்டிருக்கவில்லை.

மைதீன் உலவியை நீக்கியதில் பி.ஜே.யின் சதி திட்டம் உள்ளது.

தலைப்பு வாரியாக பத்திரிக்கை. பி.ஜே. எழுதினால் நன்றாக இருக்கும். பி.ஜே.யை ஆசிரியராகக் கொண்டு வெளியிடத்தானே மதுரை அப்துல்லாஹ்விடமிருந்து பத்திரிக்கையை ஐ.ஏ.ஸி. வாங்கியது. 

நாகூர் மாநாட்டை ரத்து செய்துவிட்டு ஐ.ஏ.ஸி.யுடன் எந்த தொடர்பும் வைக்க மாட்டேன் என்றவர் தானே தொடர்பு கொண்டு ஐ.ஏ.ஸி. பத்திரிக்கையில் எழுதுகிறேன் என்று முன் வரும்போது ஏன் தவிர்க்க வேண்டும் என்று மைதீன் உலவியை நீக்க முடிவு செய்தோம். 

மைதீன் உலவியை நீக்கியதில் பி.ஜே.யின் சதி திட்டம் உள்ளது. இது அப்பொழுது பலமாக பேசப்பட்டாலும் கூறப்பட்ட எதார்த்தமான காரணத்தால் அது எடுபடவில்லை. அதற்காக பொய்யான எந்தக் காணங்களையும் பி.ஜே. மாதிரி நாம் இட்டுக் கட்டவில்லை.

அல்ஜன்னத்தை விட்டு விட்டு வந்தவர்.

பி.ஜே. ஹனீபாவையும் நீக்க வேண்டும் என்றார். ஒரே நேரத்தில் 2 பேரையும் நீக்க சாத்தியம் இல்லை என்று கூறி ஒவ்வொருவராக நீக்குவோம் என்றேன். இது சம்பந்தமாக மஷுரா செய்தபோது பி.ஜே.யை ஆசிரியராகக் கொண்டு வெளி வருவதில் மகிழ்ச்சி. 

ஏற்கனவே ஐ.ஏ.ஸி.யை உதறி விட்டுப் போனவர். “அல்ஜன்னத்தை“ விட்டு விட்டு வந்தவர் திடீரென அல்முபீனையும் விட்டு விட்டு போக மாட்டார் என்பது என்ன நிச்சயம்? எனவே அவரிடம் எழுத்து மூலமாக எழுதி வாங்குங்கள் என்றார்கள்.

பிரிஸ்டீஜ் பார்க்கிறார் பி.ஜே.

மஷுராவில் இப்படி பேசப்பட்டது என்று கூறாமல் முறையாக எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று பி.ஜே. இடம் கூறினேன். பிரச்சனை என்றால் தான் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எப்பொழுதும் செயல்படக்கூடிய பி.ஜே. தனக்கு பத்திரிக்கையும் வேண்டும் எழுத்து மூலமாக தான் எந்த பிடியும் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக வழக்கம்போல் இதிலும் சதி செய்தார்.

அவர் பாஷையில் ஹிக்மத் பண்ணினார். நீங்களாக அல் முபீனுக்கு ஆசிரியர் தேவை என்று த.பி.கு.வுக்கு எழுதுவதுபோல் எழுதுங்கள் என்றார். 

லுஹாவும், அவராக வலிய வந்து அல்முபீனில் எழுத வந்த மாதிரி ஆகி விடக்கூடாதே என்று பிரிஸ்டீஜ் பார்க்கிறார் பி.ஜே. அல் முபீனில் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எனவே அவர் விருபப்பப்படி பேக்ஸ் அனுப்பி விடுங்கள் என்றார்.

பக்ரி நிபந்தனைகளை பிரச்சனையாக கருத வேண்டாம்.

பி.ஜே.யும் லுஹாவும் சொன்னபடி தவ்ஹீது பிரச்சாரக் குழுவுக்கு பேக்ஸ் அனுப்பினோம். சென்னைக்கு அனுப்பப்பட்ட பேக்ஸுக்கு சவூதில் இருந்து பதில் வருகிறது. அப்போதைய பி.ஜே. அமைப்பான த.பி.கு.வின் பினாமி தலைவரான ஹாமித் பக்ரி சவூதில் இருந்ததால் சவூதில் இருந்து பதில் வந்துள்ளது. 

சவூதியிலிருந்து துபை வந்த பக்ரி நாங்களாக அல்முபீனுக்கு த.பி.கு.விலிருந்து ஆசிரியர் வேண்டும் என்று கேட்டதுபோல் எண்ணிக் கொண்டு பல நிபந்தனைகள் வைத்தார். 

என்னங்க பக்ரி ஏகப்பட்ட நிபந்தனைகள் சொல்கிறார் என்று லுஹாவிடம் கேட்டதற்கு பி.ஜே.தானே எழுத விரும்புகிறார். பக்ரிக்கு அது பற்றி தெரியாது பக்ரி நிபந்தனைகளை பிரச்சனையாக கருத வேண்டாம் என்றார்.

மீண்டும் குறுக்கிட்ட வரட்டுக் கவுரவ வார்த்தை.

இறுதியாக மைதீன் உலவி நீக்கப்பட்டு பி.ஜே. உலவி ஆசிரியர் என்று முடிவானது. பப்ளிஷர் ஹனீபாவின் பணிகள் ஆசிரியர் பி.ஜே.யின் பணிகள் எழுதப்பட்டு முறைப்படி கையெழுத்திட்டு அனுப்பும்படி 2 பேருக்கும் அனுப்பப்பட்டது. ஹனீபா கையெழுத்திட்டு அனுப்பி விட்டார். பி.ஜே. அனுப்பவில்லை. 

இனி ஐ.ஏ.ஸி. இதழில் ஆசிரியராக இருக்க மாட்டேன் என்று 1988ல் சொன்ன வரட்டுக் கவுரவ வார்த்தை மீண்டும் குறுக்கிட்டது. ஆசிரியராக மற்றவர்கள் பெயரை போட்டு விட்டு நான் எழுதுகிறேன் என்றார். நீங்கள் ஆசிரியராக இருந்து எழுதுவேன் என்றதால்தான் உலவியை நீக்கினோம். இப்பொழுது நீங்கள் ஆசிரியராக இருக்க மாட்டேன் என்றால் மற்றவர்களுக்கு என்ன பதில் சொல்வது இப்படியாக பல முறை பேசி பின் ஒரு முடிவுக்கு வந்தார்.

நிவ்ஸ் எடிட்டர் - செய்தி ஆசிரியர்.

மாநாடுகள் தவிர எதிலும் பேச மாட்டேன் என்று அறிவிப்பு செய்தார். அதன் பிறகு தான் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களையெல்லாம் மாநாடு - இஜ்திமா என்று போடச் சொல்லி கலந்து கொண்டாரல்லவா. அது மாதிரி உலகில் இதுவரை இல்லாத நிவ்ஸ் எடிட்டர் - செய்தி ஆசிரியர் என்று போடச் செய்தார்.

லுஹா தங்கள் சாய்பு மாதிரி ஆகிவிட்டார் என்று எழுதி உள்ளீர்கள் அவரை தங்கள் சாய்பு ஆக ஆக்கியது நீங்கள்தானே. உங்கள் சுயநலலுக்காக வாழ்வுரிமை மாநாட்டுக்கு வந்தபோதும் அடுத்து நீங்கள் சொல்லும் 10லட்சம் வசூலுக்கு வந்த போதும் அவரது துணியை துவைக்க ஒரு ஆள் அய்ன் பண்ண ஒரு ஆள் என்று பைசலிலும் ரூமிலும் செய்து கொடுத்தீங்களே அப்பொழுது மட்டும் அவர் சாய்பு தங்களா தெரிய வில்லையா? என்று கேட்டுள்ளீர்கள்.

வாழ்வுரிமை மாநாட்டை காரணம் காட்டி நாம் வரவழைத்தபோதும் 10 லட்சம் வசூலுக்கு வந்த போதும் அவர் நம்மிடம் ஒரு விருந்தாளி. உங்களிடம் விருந்தாளியாக தங்க வந்த ஒருவரை நீங்கள் எப்படி கவுரவப்படுத்துவீர்களோ அது மாதிரிதான் நாம் ஒரு விருந்தாளிக்குரிய கடமையை செய்தோம். இதை சாய்பு தங்கள் மாதிரி என்று சொல்ல முடியாது. ஆனால் இப்பொழுது அவர் சாய்பு தங்கள் மாதிரி ஆகிவிட்டார் என்பது உண்மை.

திருமண குத்பாவுக்கு லுஹாவை வர வேண்டாம் என்று சொன்னால் அந்த தெருக்காரர்கள் மீது கோர்ட்டில் கேஸ் போடு போலீஸில் கம்ளைன்ட் செய் என்று ஏவி விட்டீர்கள். பெண் வீட்டுக்காரர் லுஹா வர வேண்டாம் என மறுத்தால் பெண்ணையே வேண்டாம் என்று மாப்பிள்ளையை மிரட்டச் செய்து லுஹா இன்றி திருமணம் இல்லை என்ற நிலையை உருவாக்கினீர்கள். இப்படியெல்லாம் செய்த நீங்கள் சமீபத்தில் உங்கள் சொந்தக்கார குடும்பத்தில் நடந்த திருமணத்திற்கு லுஹா வர வேண்டாம் என்று காஜா நாயகம் தெரு ஜமாஅத் சொன்னபோது அதை எதிர்க்கவில்லை. 

மாப்பிள்ளை வீட்டு தெருவில் நிக்காஹ் நடந்தது. பெண் வீட்டுக்கு அடுத்த வீடு உங்கள் அக்காள் வீடு என்பதால் உங்கள் அக்காள் வீட்டு வாசலுக்கு லுஹா வரக்கூடாது என்று அந்த ஜமாஅத் முடிவை ஆதரித்து நின்று உள்ளீர்கள் உங்களின் இந்த செயல் தவ்ஹீது கொள்கைக்கு எதிரானது இல்லையா? என்று கேட்டுள்ளீர்கள்.

நான்தான் அவர்களை சமாதானப்படுத்தினேன்.

அந்த திருமணத்திற்கு லுஹா வர வேண்டாம் என்று தெரு(ஊர்)க்காரர்கள் சொல்வதற்கு முன்பாகவே, பழுலுல் இலாஹி மீது அநியாயமாக பொய் கூறிய லுஹா வந்தால் திருமணத்திற்கு நாங்கள் வர மாட்டோம் என்று பெண்ணின் தந்தை வழி உறவினரே கூறியுள்ளார்கள். 

லுஹாவை அழைக்கக் கூடாது என்று மாப்பிள்ளை இடம் நான் சொல்வேன் என்றும் எதிர் பார்த்தார்கள். பெண்ணின் தந்தை என்னிடம்தான் முறையிட்டார். லுஹா என்மீது அநியாயமாக கூறியுள்ள குற்றச்சாட்டுப் பிரச்சனையை கல்யாண வீட்டில் கொண்டு வரக் கூடாது என்று கூறி நான்தான் அவர்களை சமாதானப்படுத்தினேன். மேலும் அந்த திருமணத்திற்கு எந்த அளவு உதவியாக இருந்தேன் என்பது பெண்ணின் பெற்றோருக்குத் தெரியும்.

கொள்கையை எதிர்த்து அல்ல. ஆபாச பேச்சுக்களை எதிர்த்துத்தான்.

லுஹா மேலப்பாளையத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு திருமண குத்பாவுக்கு லுஹாவை வர வேண்டாம் என்று தெரு(ஊர்)க்காரர்கள் சொன்னது லுஹாவை எதிர்த்து அல்ல. திருமணங்களை ஒட்டித்தான் தெருக்களில் கொள்கைப் பிரச்சாரம் செய்ய முடியும் என்றிருந்த நேரத்தில், கொள்கையை எதிர்த்துதான் வரவேண்டாம் என்றார்கள். 

எனவே நாம், நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி கோர்ட்டு, கேஸ், போலீஸ் என்றது கொள்கைக்காக. இப்பொழுது நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த திருமணத்திற்கு லுஹா வர வேண்டாம் என்று காஜா நாயகம் தெரு ஜமாஅத்தார்கள் சொன்னது கொள்கையை எதிர்த்து அல்ல. தப்லீக்காரன் ஜமாஅத்தில் போகிறான் தப்லீக்காரன் பொண்டாட்டி --- என்கிற மாதிரியான லுஹாவின் நாகரீகமற்ற அசிங்கமான அருவெருப்பான ஆபாச பேச்சுக்களை எதிர்த்துத்தான் லுஹா வர வேண்டாம் என்றார்கள்.

கொள்கை உணர்வு இருந்திருந்தால்.

இதை தெளிவாகச் சொல்லி உள்ள காஜா நாயகம் தெரு ஜமாஅத்தார்கள், லுஹா அல்லாத தவ்ஹீது ஆலிம்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும், பேசட்டும், உங்கள் கொள்கைப்படி திருமணம் நடக்கட்டும் என்றும் சொல்லி உள்ளார்கள். எப்படியாவது அந்தப் பகுதியில் கொள்கைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கொள்கை உணர்வு அந்த மாப்பிள்ளைக்கு இருந்திருந்தால், லுஹாவை அவர் ஸாஹிபு - தங்கள் மாதிரி எண்ணாதிருந்தால் வேறு ஒரு பிரச்சாரகரைக் கொண்டு காஜா நாயகம் தெருவில் நிகழ்ச்சி நடத்தி கொள்கைப் பிரச்சாரம் நடக்க வழி செய்திருப்பார்.

ஸாஹிபு - தங்கள் போல் ஆகி விட்டார்.

லுஹாவும் தன்னை ஸாஹிபு - தங்கள் மாதிரி எண்ணாதிருந்தால் லுஹா இன்றி அவரது வகையறாக்களின் திருமணம் இல்லை என்ற புரோகித நிலையை உடைத் தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், வேறு ஒரு பிரச்சாரகரைக் கொண்டு காஜா நாயகம் தெருவில் அந்த திருமணத்தை நடத்தக் கூறி இருப்பார். ஸாஹிபு - தங்கள் இன்றி திருமணம் இல்லையோ என்று சுன்னத் ஜமாஅத்தைப் பார்த்துக் கேட்ட லுஹாதான் இன்று தான் இன்றி தன் வகையறாக்களின் திருமணம் இல்லை என்ற நிலையை உருவாக்கி ஸாஹிபு - தங்கள் போல் ஆகி விட்டார்.

ஊருக்கு உபதேசிப்பவர்கள் என்று மற்றவர்களை விமர்சிக்கும் நீங்கள் பெண் வீட்டில் திருமண விருந்து இல்லை என ஊர் உலகத்துக்கு கூறி விட்டு பெரிய விருந்து நடத்தியதுதான் உங்கள் குடும்ப தவ்ஹீதா? மழுப்பல் இன்றி பதில் சொல்லவும் என்று எழுதி உள்ளீர்கள்.

எங்களை கூப்பிடுங்கள் என்று வாய் விட்டு கேட்பார்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள திருமண விருந்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெரிய திருமண விருந்துகளில் கலந்து கொள்ள மாட்டோம் என்று லுஹா பேசுவதெல்லாம் விளம்பரத்திற்காகத்தான். “உலவி| வழியில் ஊருக்கு உபதேசிக்கத்தான். இதை நிரூபிப்பதைப் போல, அந்த திருமண நிகழ்ச்சியிலும் அதே மாதிரி பேசிவிட்டு லுஹா வகையறாக்கள்தான் கூட்டம் கூட்டமாகப் போய் சாப்பிட்டுள்ளார்கள். 

300 கல விருந்தில் லுஹா வகையறா சாப்பாட்டு படையினர் மட்டும் 52 பேர். இது பெரிய விஷயமல்ல. மவ்லூது, கத்தம், பாத்திஹா, சடங்கு என எந்த சாப்பாடும் இல்லை. நீங்களாவது எங்களை கூப்பிடுங்கள் என்று வாய் விட்டு கேட்பார் அந்த கொள்கை வீரர். மவ்லூது, கத்தம், பாத்திஹா, சடங்கு என சாப்பிடுகிறார்கள் என்று விமர்சிக்கும் இவர்கள் அவற்றை கூடாது என்று சொல்லி சாப்பிடுகிறார்கள் வித்தியாசம். இதுதான்.

கொள்கையில் உறுதி உள்ள மாப்பிள்ளை.

ஒருவரது குடும்பம் என்பதற்குரிய அளவுகோல் என்ன? எனது பொறுப்பிலும் முழுமையாக எனது வருவாயிலும் வாழ்பவர்கள்தான் எனது குடும்பம். நடந்த திருமணம் உறவினர் உடையதுதான். கொள்கையில் உறுதியாhக இருந்த மாப்பிள்ளைகள் மூலம் பெண் வீட்டு அனாச்சார செலவுகளை தடுத்து நிறுத்தி இருக்கிறேன். 

அடுத்த வேலை சோற்றுக்கு வக்கில்லாத நிலையில் சம்ஸா டீ கொடுத்து திருமணம் செய்வதற்குப் பெயர் எளிய திருமணம் அல்ல. 

வசதி உள்ளவன் அது மாதிரி செய்தால் அதற்குப் பெயர் எளிய திருமணம். தண்டன் சாகுல் என்பவரது திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்து அழைப்பும் கொடுத்து விட்டார்கள். அழைப்பு கொடுக்கப்பட்ட செய்தி கிடைத்த பின்னர் கொள்கையில் உறுதி உள்ள மாப்பிள்ளை மூலம் அந்த ஆடம்பர விருந்தை தடுத்து நிறுத்தினேன். உணர்விலும் இந்தச் செய்தி இடம் பெற்றது.

மறுமையில் கமாலுத்தீன் மதனி வந்து முறையிடுவார் என்கிறீர்கள்

ஏர்வாடியில் நடந்த ஒற்றுமை கூட்டத்தில் ஒற்றுமை ஏற்படாமல் போக கணக்கு மனைவி இடம் இருக்கு என்று பி.ஜே. சொன்னார் என்று எழுதி உள்ளீர்கள். (பழைய நோட்டீஸில்) இப்பொழுது நீதி நியாயம் சம்பந்தமாக பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் ஏன் அப்பொழுதே தட்டிக் கேட்கவில்லை. பிறகும் பி.ஜேயுடன்தான் இருந்தீர்கள். அதற்குப் பிறகு கமாலுத்தீன் மதனிக்கும் ஜாக்குக்கும் எதிராக நீங்கள் மதுரை மாநாட்டின் போது நோட்டீஸ் போட்டீர்களா இல்லையா? உங்களுக்கு எதிராக கமாலுத்தீன் மதனி மறுமையில் வர மாட்டாரா? என்று கேட்டுள்ளீர்கள்.

தாரை தாரையாக கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழுத பி.ஜே.

இது மிக முக்கியமான கேள்வி. பி.ஜே.யின் ஆதிக்க உணர்வை - டாமினேட் தன்மையை நான் உணர்ந்த கால கட்டத்தை ஒட்டிய கேள்வி. ஏர்வாடியில் நடந்த ஒற்றுமைக் கூட்ட நிகழ்ச்சி 16.8.2000. மாநாடு 19.8.2000. இந்த இடைப்பட்ட காலத்தில் என் பெயரில் எந்த நோட்டீஸும் வெளியிடப்படவில்லை. அப்பொழுது தட்டிக் கேட்காததற்கு பல காரணங்கள் உண்டு. 

ஒன்று பி.ஜே. தாரை தாரையாக கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டே சொன்னது. இரண்டாவது பி.ஜே. குறிப்பிட்டுக் கூறும் திருச்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் நேரடி சாட்சிகளுமான ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, ஷம்சுல்லுஹா போன்றவர்கள் மவுனமாக இருந்தது. 

இவை எனக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. நியாய உணர்வு இருந்ததால்தான் பி.ஜே. அழுத இந்த நிகழ்ச்சி நடந்த வீட்டை விட்டு வெளியேறியதும் கணக்கு மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னாரா? என்று லுஹாவிடம் கேட்டேன் “அப்படி சொல்ல வில்லையே....இந்தக் கொல்லையிலே போவான்  ஏன் இப்படி சொன்னான்....” என்று இழுத்த வண்ணம் பதில் சொன்னார் லுஹா. இந்த லுஹாதான் இதே விஷயத்தில் பொய் சத்தியமும் செய்துள்ளார்.

பொய்களை அரங்கேற்ற ஒரே வழி.

நான் மாநாட்டு தலைவராக இருந்ததால் ஏர்வாடியிலிருந்து அப்படியே மாநாட்டு திடலுக்கு செல்வதாக இருந்தேன். இந்த பொய்யான குற்றச்சாட்டைக் கேட்ட பின் நேரடியாக வீட்டுக்கு வந்து பி.ஜே. சொன்ன நிகழ்ச்சியின் ஆடியோ போட்டுக் கேட்டேன் பி.ஜே. குழுங்கி குழுங்கி அழுது தாரை தாரையாக கண்ணீர் வடித்துக் கூறியது பொய்தான் என்பதை மிகத் தெளிவாக விளங்கினேன். 

பின்னொரு நாளில் இம்தாதி இடமும் கேட்டேன். முகத்தாட்சண்யமின்றி எல்லாரையும் கண்டித்து கேள்வி கேட்பீர்களே, கணக்கு மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னார் என்று ஏர்வாடியில் பி.ஜே. பொய் சொன்னபோது கண்டு கொள்ளாமல் இருந்து விட்டீர்களே ஏன்? என்று கேட்டேன். 

பி.ஜே. அழுது கொண்டே சொன்னதால் பேச முடியாமல் ஆகி விட்டேன் என்றார். இந்த மாதிரி அனுபவங்கள்தான் பி.ஜே. பொய்களை அரங்கேற்ற ஒரே வழி அழுது கண்ணீர் வடிப்பது என்று முடிவு செய்துவிட்டார் போலும்.

பணம் பண்ணும் வியாபார நோக்க மாநாடு.

பி.ஜே.யின் வீட்டிலிருந்து பேசிக் கொண்டிருக்கும்போது பிரச்சாரக் குழு சார்பில் தர்பியத் மாநாடு என்று அறிவித்து நடத்தவில்லை. கலந்து கொள்ளும் நபருக்கு 150 ரூபாய் என வசூலித்ததாக அறிந்தேன் என்ன ஆயிற்று? நெல்லையில் இஸ்லாமிய எழுச்சி மாநாடு நடத்தலாம் என்று எண்ணுகிறேன். தடை செய்யபப்ட்ட  மதுரை தமுக்கம் மைதானத்தில் மீண்டும் மாநாடு நடத்திக் காட்ட வேண்டும்  என்றேன். 

உடனே தவ்ஹீது கொள்கையை உயிரினும் மேலாகக் கருதுவதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் பி.ஜே. சொன்ன பதில் என்ன தெரியுமா? மாநாடு நடத்துவோம். மாநாடு என்றால் நல்ல வசூல் ஆகும் பணம் நல்ல மிச்சப்படும். 

(வாழ்வுரிமை மாநாட்டில் மிச்சம் பற்றிய விபரத்தை கூறிவிட்டு) மதுரை மாநாடு தடையானதும் அந்த பணத்தில் உருவானதுதான் அண்ணா பஸ் ஸ்டாண்ட் பள்ளி என்று இஸ்லாமிய எழுச்சி மாநாட்டின் நோக்கத்தை பணம் பண்ணும் வியாபார நோக்க மாநாடாக பதில் அளித்தார்.

நான் பதவி வகிக்க மாட்டேன் என்று கூறுவதெல்லாம் எதற்கு?

சற்று நேரத்தில் தன்னிச்சையாக என்னை கன்வீனர் என்று அறிவித்து பிரசுரம் வெளியிட்டார். தவ்ஹீது பிரச்சாரக் குழு, அதற்கு ஒரு தலைமை, அதற்கு ஒரு நிர்வாகம் என்பதெல்லாம் பி.ஜே. என்ற சர்வாதிகாரியின் கைக்குள்தான் இருந்தது என்பதற்கு அந்த பிரசுரம் ஒரு ஆதாரமாகும். 

தலைமை, நிர்வாகக் குழு என அமைப்பதும் நான் பதவி வகிக்க மாட்டேன் என்று கூறுவதெல்லாம் எதற்கு? நல்லது நடந்தால் தன்னால்தான் என்று உரிமை கொண்டாடவும் பாதகம் ஏற்பட்டால் தலைமை மீதும் நிர்வாகத்தினர் மீதும் பழி போட்டு தப்பிக்கவும்தான். பொறுப்பில் இல்லாவிட்டாலும் தனது ஆதிக்கப் பிடியை மட்டும் எப்பொழுதும் தளர்த்த மாட்டார்.

பின்னணி சமுதாயத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்?

மதுரை மாநாட்டு கன்வீனர் என்ற பொறுப்புதான் பி.ஜே.யின் சர்வாதிகாரித் தன்மையை, பொறுப்பிற்கு வந்தவர்களை டம்மிகளாக்கிடும் மனப் போக்கை, பொறுப்பாளர்கள் தனது பினாமிகளாகத்தான் செயல்பட வேண்டும் என்று அவர் எதிர் பார்ப்பதை உணர வைத்தது. 

திருச்சியில் கூடிய கூட்டத்தில் மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டு; தலைவராக ஆனோம். மாநாட்டுக் குழுவும் பெயரளவுக்குத்தான். அதாவது அதுவும் டம்மிதான். மம்மி பி.ஜே.தான். 

எந்த ஒரு விஷயமும் முடிவு எடுக்கும் உரிமை மாநாட்டுக் குழுவுக்கு இருந்தது கிடையாது. சாதாரண பொதுக்கூட்டங்களின் நிகழ்ச்சி நிரல்கள் கூட முடிவு செய்யப்பட்டு பிரசுரங்களாக வினியோகிக்கப்பட்டு விடும். மாநில மாநாடு என்று அறிவிக்கப்பட்ட மதுரை மாநாட்டு நிகழ்ச்சி நிரல்கள் ஆகஸ்ட்டு 18 ஆம் தேதி இஷா வரை முடிவு செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. மாநாட்டு நிகழ்ச்சி நிரல்கள் பிரசுரமாக வெளிவரவில்லை என்பது சமுதாயத்திற்கு தெரியும். இதன் பின்னணி சமுதாயத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்?

எல்லாரும் பி.ஜே.யின் பினாமிகளாகத்தான் இருக்க முடிந்தது.

நான் எதிலும் பொறுப்பு வகிக்க மாட்டேன் என்பதன் மூலம் எப்பொழுதும் விளம்பரம் தேடிக் கொள்ளும் பி.ஜே. மதுரை மாநாட்டு குழுவிலும் பொறுப்பு வகிக்க மாட்டேன் என்று அறிவித்து பொறுப்பை விரும்பாதவர் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார். 

ஆனால் மாநாட்டுக்கு பேச்சாளர்களாக யார் யாரை அழைக்க வேண்டும்? என்ன என்ன தலைப்புகளில் பேசச் சொல்லலாம்? என்ற முடிவைக் கூட மாநாட்டுக் குழுவால் தீர்மானிக்க முடிந்ததில்லை. எந்த ஒரு பேச்சாளர் பெயரைச் சொன்னாலும் (மாநாட்டுக் குழுவில் உறுப்பினராகக் கூட இல்லாத) பி.ஜே. சம்மதிப்பாரா? என்பதுதான் அளவுகோலாக இருந்தது. மாநாட்டுக் குழு என்பதெல்லாம் பெயரளவுக்குத்தான். எல்லாரும் பி.ஜே.யின் பினாமிகளாகத்தான் இருக்க முடிந்தது.


சமயம் பார்த்து சொல்லுங்கள்.


ரஹ்மதுல்லா இம்தாதியை மாநாட்டுக்கு அழைக்கக் கூடாது என்று பி.ஜே. கூறி விட்டார். அவரை அழைக்கத்தான் வேண்டும் என்று கூற யாருக்கும் தெம்பு இல்லை. அந்த அளவுக்கு கொத்தடிமைகளாகத்தான் மாநாட்டுக் குழுவினர் இருந்தார்கள். 

மாநாட்டுக் குழு மஷுரா நடக்கிறது. ரஹ்மதுல்லா இம்தாதியை அழைக்காவிட்டால் எங்கள் ஊரில் பிரச்சனையாகும். எனவே பி.ஜே. இடம் சமயம் பார்த்து சொல்லுங்கள் என்று என்னிடம் ஸைபுல்லா ஹாஜா வேண்டுகோள் வைத்தார். 

லுஹாவும் இம்தாதியை கூப்பிடாவிட்டால் கடையநல்லூரில் பிரச்சனை வரும் எனவே சமயம் பார்த்து எப்படியாவது சொல்லுங்கள் என்றார். மாநாட்டுக் குழு தலைவரான என்னிடம் இவ்வாறு அவர்கள் சொன்னதன் மூலம் எதை நிரூபித்தார்கள்? எதை எனக்கு அறிவுறுத்தினார்கள்?

குழு, தலைமை, மஷுரா எல்லாம் சும்மாதான் பி.ஜே.தான் உம்மா. நாங்கள் கொத்தடிமைகள் நீங்கள் கொத்தடிமைக்குழு தலைவர். மாநாட்டுக் குழு உறுப்பினர் என்பதால் சுயமாக நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. மாநாட்டுக் குழு தலைவர் என்பதால் நீங்களும் எந்த முடிவு எடுக்க முடியாது. இதைத்தான் அறிவுறுத்தினார்கள்.

பி.ஜே. இம்தாதியை சந்திக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே இந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் தெரியாத இம்தாதி பி.ஜே.யை நான் நேரில் சந்தித்து தனியாக பேசனும். பேசினால் ஜாக் பிரச்சனை உட்பட எல்லா பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு வந்து விடும் என்றார். ஒற்றுமையை எந்தக் காலத்திலும் விரும்பாத பி.ஜே. இம்தாதியை சந்திக்க மறுத்து விட்டார். 

மாநாட்டுக்கு இம்தாதியை அழைக்க முடியாத சூழ்நிலையில் இம்தாதி மாநாட்டுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. எனவே கடையநல்லூர் பள்ளியில் வைத்து இம்தாதியைப் பார்த்து, உங்களை அழைப்பேன் என்று எதிர்பார்க்கக் கூடாது. இஸ்லாமிய பிரச்சாரகர் என்ற முறையில் மாநாட்டில் உரிமையோடு வந்து கலந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்றேன்.

இதற்குப் பிறகுதான் பி.ஜே. பணிந்துள்ளார்.

இதற்குப் பிறகு பி.ஜே. இடம் நான் பேசிய பின் இம்தாதியை அழைக்க ஒப்புக் கொண்டார். பொறியாளர் சபியுல்லா உட்பட பி.ஜே. சொன்னபொழுதெல்லாம் சவூதியில் இருந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தவர்கள் பி.ஜே. இடம் பேசி உள்ளார்கள். 

ஷெய்கு இம்தாதி இங்கு “தாஇ”யாக உள்ளார். அவர் ஊரால் உள்ள நிலையில் மாநாட்டில் பேச வைக்கவில்லை எனில் இங்கு அதன் பாதிப்பு தெரியும் என்று கூறி உள்ளனர். இதற்குப் பிறகுதான் பி.ஜே. பணிந்துள்ளார். நான் பேசிய பின் ஒப்புக் கொண்டார் என்று நான் நம்பியது தவறு என்பதை ஒண்ணரையாண்டுக்கு முன்தான் சவூதி சகோதரர் மூலம் இந்த உண்மையை அறிந்தேன்.

பி.ஜே. தன்னை காத்துக் கொள்வதற்காக அடைக்கலம் புகுந்த த.மு.மு.க.வின் வாழ்வுரிமை மாநாட்டின்போது எத்தனை விளக்கக் கூட்டங்களில் பேசினார். எத்தனை இடங்களில் விடிய விடிய சுபுஹு வரை கலந்தாலோசித்தார். அப்படிப்பட்டவர் தனக்கு த.மு.மு.க. தேவை இல்லை என்றானதும் தஞ்சைப் பேரணியை தோற்கடிக்க எப்படியெல்லாம் சதி செய்தார் என்பதெல்லாம் இப்பொழுது அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

ஏனோ தானோ என்ற விளம்பரம் வெளியிட்டார் பி.ஜே.

உயிரினும் மேலானது தவ்ஹீது கொள்கை என்று கூறி தவ்ஹீதின் பெயரால் விளம்பரம் தேடித்திரியும் பி.ஜே. அந்த மதுரை மாநாட்டு வெற்றிக்காக மாநாட்டை முற்படுத்தி எத்தனை கூட்டங்கள் பேசினார்? 

அவர் நினைத்த பினாமியாக டம்மியாக நாம் இல்லை என்றதும் தான் கலந்து கொண்ட கூட்டங்களை மாநாட்டு விளக்கப் பொதுக் கூட்டம் என்று போடுவதைக் கூட தவிர்த்தார். 

உணர்வில் மாநாட்டு செய்தி வெளியிடுமாறு பல முறை வற்புறுத்தியும் வெளியிடவில்லை. மாநாட்டு விளம்பரம் போடுமாறு ஒவ்வொரு வாரமும் வற்புறுத்திக் கூறியும் கடைசி நேரத்தில் மட்டும் போட்டார். 

யார் யார் என்ன என்ன தலைப்புகளில் பேசுகிறார்கள் என்ற விபரப்படிகூட இல்லாமல் பேச்சாளர்கள் பட்டியல் தனியாக தலைப்புகள் தனியாக இப்படி ஏனோ தானோ என்ற விளம்பரம் வெளியிட்டார் பி.ஜே.

ஸாஜிதா புக் சென்டர் கடை போட அனுமதிக்கக் கூடாது.

ஜக்கரிய்யா மீது பி.ஜே.க்கு ஏற்பட்டுள்ள மனக் கசப்பால் ஸாஜிதா புக் சென்டருக்கு போட்டியாக மூன் பப்ளிகேஷன் துவக்கினார். முஸ்லிம் பெண்மணிக்கு போட்டியாக ஏகத்துவ பெண்மணி என்ற பத்திரிக்கை கொண்டு வர சதி திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது புதிதாக துவங்கி உள்ள அமைப்பின் நிகழ்ச்சிகளில் ஸாஜிதா புக் சென்டர் கடை போட அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார்.

ஜவாஹிருல்லாஹ், ஜாக்கிர் நாயக் புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது.

அது மட்டுமா? ஜவாஹிருல்லாஹ் எழுதி இவர் மதிப்புரை வழங்கிய புத்தகங்களையும் ஜாக்கிர் நாயக் புத்தகங்களையும் விற்பனை செய்யக் கூடாது என்று இப்பொழுது உத்தரவு போட்டுள்ளார். 

அப்படிப்பட்ட பி.ஜே.க்கு மைதீன் உலவி மீது இருந்த மனக் கசப்பால் மாநாட்டு திடலில் மைதீன் உலவி கடை போட இடம் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். 

மைதீன் உலவி சகலை காஜா கமால் என்னிடம் வந்து சகலைக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார். நான் என்ற அகம்பாவம் பீடித்துள்ளவரை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. கடைகள் கொடுப்பது சம்பந்தமாக அமைக்கப்பட்டுள்ள குழுவில் மனு கொடுங்கள் என்றுதான் கூற முடிந்தது.

ஒவ்வொரு அமர்வின் நிகழ்ச்சிகளும் பி.ஜே. விருப்பப்படி எழுதப்பட்டது.

இவருடைய ஆதிக்கத்தால் மாநாட்டுக் குழுவினரால் நிகழ்ச்சி நிரல் தயாரிக்க முடியவில்லை. மாநாட்டுக் குழுவினரையெல்லாம் அவரை எதிர் பார்த்துக் கிடக்க வைத்ததார். தென்காசி எம்.எஸ். சுலைமான் அந்த ஆளை கூப்பிடுங்க. பொம்பளை புள்ளைங்க கூடவே கிடக்கிறான் என்று என்னிடம் கத்தி என்னை சூடாக்கினார்.

சூடான நான், 18 ஆம் தேதி மஃரிபுக்குப் பின் இந்த ஆள் செத்து விட்டால் என்னங்க செய்வீர்கள்? விடிந்தால் மாநாடு இன்னும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கவில்லை என்றால் என்று சப்தம் போட்டேன். அதற்குப் பிறகுதான் அவருக்கு அடிமையாக இருந்தே பழக்கப்பட்டு விட்ட பக்ரி, லுஹா, சுலைமான் போன்றவர்கள் வந்தமர்ந்தார்கள். பிறகு பி.ஜே. வந்தமர்ந்தார். ஒவ்வொரு அமர்வின் நிகழ்ச்சிகளும் பி.ஜே. விருப்பப்படி எழுதப்பட்டது.

பினாமியாகவும் அடிமைகளோடு அடிமைகளாகத்தான் இருந்தேன்.

அன்றைக்கே நான் எதிர்த்திருந்தால் 1988ல் நாகூரில் அறிவிக்கப்பட்ட மாநாட்டை எப்படி நிறுத்தினாரோ அதுபோல் அறிவிக்கப்பட்ட மதுரை மாநாட்டையும் நிறுத்தி இருப்பார். அதன் மூலம் அப்பொழுதே அபாண்டங்களை சுமத்தி கேவலப்படுத்தி இருப்பார். 

எனவே நான் நிர்ப்பந்தத்தில் வெறுப்புடன் விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் நாம் பொறுப்பேற்றுள்ள மாநாடு நின்று விடக் கூடாதே என்றுதான் இருந்தேன். அதாவது மாநாட்டு தலைவரான நானும் பெரும்பாலும் பினாமியாகவும் அடிமைகளோடு அடிமைகளாகவும்தான் இருந்தேன்.

ஆதிக்க சக்தியை எவ்வளவு காலம்தான் அனுசரித்து போக முடியும்.?

அதுபோல்தான் ஒவ்வொரு பொறுப்பான நிர்வாகிகளும் என்னைப் போல் நிர்ப்பந்தத்தில் மாட்டிக் கொண்டு வெறுப்புடன் விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் நாம் பொறுப்பேற்றுள்ள சமுதாயம் மற்றும் மார்க்கப் பணிகள் நின்று விடக் கூடாதே என்ற கவலையுடன் இருந்துள்ளார்கள் என்று உணர்கிறேன். 

நான் பொறுப்பு ஏற்க மாட்டேன் ஆனால் பொறுப்பு ஏற்றுள்ளவர்களை என் மனோ இச்சைப்படி ஆட்டிப்படைப்பவனாக இருப்பேன் என்கிற அந்த ஆதிக்க சக்தியை எவ்வளவு காலம்தான் அனுசரித்து போக முடியும். பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா?

இப்படி இஸ்ராப் பண்ணியவர்தான் இன்று குதிரைகளை இஸ்ராப் என்கிறார்.

1990 நாகூர் மாநாட்டின்போது கண்காட்சி பற்றி கூறியபோது அதை இஸ்ராப் என்று நிராகரித்தார். மதுரை மநாட்டில் கண்காட்சிக்கு நடத்த ஒப்புக் கொண்டவர் அவரது விருப்பப்படி கஃபா செட்டிங் செய்தார். 

அவர் சொன்ன அளவில் கஃபா செட்டிங் அமைந்தால் அது கஃபா மாதிரி இருக்காது என்று பல முறை கூறியும் ஏற்கவில்லை. செட்டிங் செய்யப்பட்ட நிலையில் போய் பார்த்து வடிவம் சரி இல்லை என்றேன். 

அப்பொழுதும் கஃபாவுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது அதைவிட சிறியதாக செய்யும்போது இப்படித்தான் இருக்கும் என்றார். பல பேர் பார்த்துவிட்டு சரி இல்லை என்று கூறிய பிறகு பிரித்து ரீ செட்டிங் செய்யப்பட்டது. 

மதுரையில் செய்யப்பட வேண்டிய வேலையை சென்னையில் வைத்து செய்து தேவை இல்லாத செலவுகளை இழுத்து வைத்தார். இதற்கு ஆகிய செலவில் ஒருவர் ஹஜ் செய்து விட்டு வந்து விடலாம். இப்படி இஸ்ராப் பண்ணியவர்தான் இன்று குதிரைகளை இஸ்ராப் என்கிறார்.

யார் இந்த தலைவர்கள்?

இது மாதிரி விளக்க இதழ்கள் வெளியிடுவது சரி இல்லை என்று சில வளர்ந்து விட்ட தலைவர்கள்? விமர்சிக்கிறார்களாம். யார் இந்த தலைவர்கள்? நேற்று வந்த நாய்கள் என்று பி.ஜே. பேசிய சி.டி.க்களை காப்பிகளாக்கி விற்றார்கள் வினியோகித்தார்கள். 

தன் தாயை தேவடியாள் என்று திட்டி கேவலப் படுத்திய பாக்கர் சி.டி.களை விற்றார்கள் வினியோகித்தார்கள். 

இந்து சகோதரரை பள்ளிவாசலுக்குள் கொண்டு வந்து ஒரு முஸ்லிம் விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்று சொல்ல வைத்து பி.ஜே. ஷுட்டிங் செய்து வெளியிட்ட வீடியோக்களை வரவழைத்து விற்றார்கள் வினியோகித்தார்கள். 

இந்த மாதிரியான விமர்சன வீடியோ கேஸட்களை வெளியிட பல மாதங்களை செலவிட்ட பி.ஜே. இதற்காக பொதுப் பணத்தையும் செலவிட்டு பொதுப் பணியில் உள்ள மேன்பவர்களையும் வீணடித்தார். 

அதையெல்லாம் சரி கண்டு ஆதரித்து பணியாற்றி வருபவர்கள்தான் இந்த தலைவர்கள். இவர்களைத்தான் அபு அவன் சாக்கடையில் உழன்ற... என்று எழுதி உள்ளார்.

பி.ஜே. வகையறா வழியில் நாம் திட்ட மாட்டோம்.

அந்த மாதிரி பணிகளால் வளர்ந்து விட்ட இந்த தலைவர்கள்தாம் நாம் நமது விமர்சன இதழ்களை வெளியிடுவது சரி இல்லை என்கிறார்களாம். பூந் தோட்டம் வழியாக சென்ற மீன்காரியும் கருவாட்டுக்காரியும் ச்சீ இது என்ன ஒரே நாற்றம் என்றார்களாம். அது மாதிரிதான் இந்த தலைவர்கள் விமர்சனம் உள்ளது. 

சத்திய நேசன் போன்ற மொட்டைப் பேர்வழிகளின் பின்னால் இருந்து இயங்குபவர்கள்தான் இந்த வளர்ந்து விட்ட தலைவர்கள். அதனால் இவர்களை பெட்டைகள், பேடிகள், வளர்ந்து கெட்டவர்கள் என்று பி.ஜே. வகையறா வழியில் நாம் திட்ட மாட்டோம்.

இது மாதிரி விளக்க இதழ்கள் வெளியிடுவதுதான் தஃவா பணியா? என்றும் சிலர் கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகிறார்கள். அவர்களின் இந்த விமர்சனம் சரியா? 

மார்க்கப் பணி - இஸ்லாமிய பணி என்பது தொழுகைக்கு அழைப்பது மட்டுமா? ஜிஹாது மட்டுமா என்று மற்றவர்களைப் பார்த்து விமர்சித்தவர்கள், இஸ்லாம் அனைத்து துறைகளிலும் தலையிடுகிறது. நன்மையை ஏவி தீமையை தடு என்கிறது. நீதியை நிலை நாட்டக் கூறுகிறது என்று கூறினார்கள். 

அப்படி கூறியவர்கள்தான் சமூக விரோதிகளான பொய்யர்களை அடையாளம் காட்டிடும் நமது பணியை இஸ்லாத்திற்கு அப்பால் பட்டதாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சொர்க்கம் நரகத்தை நிர்ணயிக்கும் செயல்.

அண்ணன் தம்பிகளான ஒரு தாய் மக்கள் அரை அடி நிலத்திற்காக அடித்துக் கொள்வார்கள். அப்பொழுது உண்மை தெரிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்தால், இஸ்லாம் நீதியை நிலை நாட்டு என்கிறதே. நியாயம் பேசாமல் இருக்கிறீர்களே ஏன்? என்று எல்லாருமே கேட்பார்கள். 

சிறிய வட்டத்திற்குள் நடக்கும் அந்த பிரச்சனையில் விபரம் தெரிந்தவன் நியாயத்தை நிலை நாட்ட வேண்டும் என்றால் வாய் திறந்து நியாயம் பேச வேண்டும். இப்படி நியாயம் பேசுவது இஸ்லாம்.

அப்படியானால் தமிழக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கெல்லாம் பத்திரிக்கைச் செய்திகளாக, சி.டி.க்களாக, ஆடியோ - வீடியோக்களாக, பிரசுரங்களாக சென்றடைந்து விட்ட இந்த பிரச்சனையில் நியாயம் எங்கே என்பதை தெரிந்தவர்கள் நியாயத்தை நிலைநாட்டுவது எப்படி? இது சாதாரண விஷயம் அல்ல, இதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரின் சொர்க்கம் நரகத்தை நிர்ணயிக்கும் செயல் இது.

மதி மயங்கியது ஏனோ? ஷய்த்தானின் சூழ்ச்சியில் சிக்கி விட்டதால்தானோ?

நன்மையான விஷயத்தை ஒருவர் ஒருவரிடம் சொன்னால், ஒருவரிடம் சொன்ன நன்மை கிடைக்கும். அதையே கேஸட்டாக பிரசுரமாக வெளியிட்டால் அது எத்தனை பேர்களிடம் போய்ச் சேருகிறதோ அத்தனை பேர்களிடம் சொன்ன நன்மைகளை பெறுகிறார். 

இப்படி கால்குலேட் பண்ணித்தான் மறுமையில் நன்மை கிடைக்கும் என்று தங்களை மட்டும் தவ்ஹீது பிரச்சாரகர்கள் என்று சொல்லிக் கொள்வோர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணத்தை யாரும் மறுப்பது இல்லை. 

 இந்த மாதிரிதானே அவர்கள் பரப்பும் அவதூறுகளும் பொய்களும் தீமைகளை பன்மடங்காக அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் என்ற கணக்கை மட்டும் பார்க்காமல் மதி மயங்கியது ஏனோ? ஷய்த்தானின் சூழ்ச்சியில் சிக்கி விட்டதால்தானோ?

அதே மாயையில் ஆளை மாற்றி சிக்க வைத்துள்ளான்.

ஆதமுடைய மக்களின் விரோதியான ஷைத்தானின் நோக்கமே மனிதர்களை நரகவாசிகளாக ஆக்குவதுதான். அவன்தான் மனிதர்களை சிலை, சிலுவை, மற்றும் பஞ்ச பூதங்களை வணங்குபவர்களாக ஆக்கினான். 

அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களாக ஆனவர்களை கபுறு வணக்கத்தின் பக்கம் கொண்டு சென்றான். அதிலிருந்து விடுபட்டவர்களை பெரியார் சொன்னார், மகான் சொன்னார், இமாம் சொன்னார் என்று ஆக்கினான். 

அதிலிருந்து விடுபட்டவர்களை ஆளை மட்டும் மாற்றி அதே சிந்தனையில் சிக்க வைத்து விட்டான். என்னதான் ஆதாரங்களைக் காட்டினாலும் அவர்கள் என்ன தப்பாகவா சொல்லி இருப்பார்கள் என்ற மாயையில் சிக்க வைத்தது போல், அதே மாயையில் ஆளை மாற்றி சிக்க வைத்துள்ளான்.

கரடி பிடித்த நிலையில் ஆகி விட்டவர்கள்.

ஷிர்க்கைத் தவிர தான் நாடியவர்களுக்கு பாவங்களை மன்னிப்பேன் என்று சொல்லும் அல்லாஹ், மனிதனுக்கு செய்த தீங்கை அந்த மனிதன் மன்னிக்காதவரை நான் மன்னிக்க மாட்டேன் என்கிறான். 

மனிதர்களுக்கு இழைத்த தீமையை சம்பந்தப்பட்டவர்களை அணுகி இவ்வுலகில் மன்னிப்புப் பெற்றால் மறுமையில் தப்பிக்க முடியும். மன்னிப்பதன் மூலம் அவரும் மகத்தான நன்மை பெறுவார். ஒவ்வொரு மனிதர்கள் மீதும் திட்டமிட்டு அவதூறு பரப்புபவர்கள் பொட்டலம் பிடிக்கப் போய் கரடி பிடித்த நிலையில் ஆகி விட்டவர்கள்.

ஷய்த்தானை விட்டு அவர்கள் விடுபட நினைத்தாலும் ஷைத்தான் அவர்களை கட்டியாக பிடித்து விட்டான் என்றே அவர்களது செயல்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. 

தங்கள் சுயநலத்திற்காக அவதூறுகளை திட்டமிட்டு பரப்பும் மேல் மட்டத்தவர்களை நம்மால் திருத்த முடியாவிட்டாலும், அவர்களை நம்பி ஏமாந்து அவதூறுகளைப் பரப்பும் அப்பாவிகளிடம் உண்மைகளை சேர்ப்பதன் மூலம் அவர்களை ஷைத்தான்களின் பிடிகளிலிருந்து விடுபடச் செய்ய முடியும். இன்ஷா அல்லாஹ். 

தெரிந்து செய்தால்தான் பாவம் தெரியாமல் நன்மை என்று நம்பி செய்தால் பவாம் இல்லை என்பது இஸ்லாத்தின் நிலை இல்லை என்பதை அல்குர்ஆன் 30:32 வசனம் தெளிவு படுத்துகிறது.

நமது விளக்க இதழ்களை அதிகமாக வெளியிட வேண்டும்.

இந்த பிரச்சனையில் நியாயம் எங்கே என்பதை தெரிந்தவர்கள் அவர்களுக்கு ஈடாக அவர்களைப் போல் அனைத்து மீடியாக்கள் மூலமும் உண்மையை வெளிப்படுத்துவதே நியாயத்தை நிலைநாட்டும் சரியான செயலாகும். 

நமது விளக்க இதழ்கள் அதற்கு ஈடு அல்ல இருந்தாலும் நம்மால் இயன்ற பணி இது. நிரந்தர நரகில் இருந்து காப்போம் என்ற கோஷத்தால் ஈர்க்கப்பட்டு தங்களை அறியாமல் தாங்களும் முப்லிஸ்களாக ஆகி சமுதாயத்தையும் முப்லிஸ்களாக ஆக்கி நரகத்தில் தள்ளும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நல் எண்ணமுடையவர்கள் நமது விளக்க இதழ்களை அதிகமாக வெளியிட வேண்டும்.

இறுதியில் நரகம் போய் சேர்வான்.

முப்லிஸ் (திவாலாகி விட்டவன்) யார்? என்று கேட்டுவிட்டு இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளிக்கும் ஹதீஸையும் உங்கள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். 

நிறைய நன்மைகளை சுமந்து கொண்டு ஒருவன் வருவான். அவனைப் பார்த்ததும் சுவர்க்கத்திற்குரியவன் என்று முடிவு செய்து விடுவார்கள். அவனால் பாதிக்கப்பட்டவர் வந்து முறையிடுவார். 

அதற்கு பகரமாக அவனது நன்மையை எடுத்து கொடுக்கப்படும். இப்படியே அவனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவராக வந்து முறையிட்டு முறையிட்டு அவனது நன்மைகள் காலியாகி விடும். 

இதற்குப் பிறகும் வந்து முறையிடுபவர்களுக்கு கொடுக்க நன்மையே இருக்காது. எனவே முறையிட்டவர்களிடமுள்ள பாவத்தை எடுத்து இவன் தலையில் வைக்கப்படும். சுவர்க்கத்திற்குரியவன் போல் வந்தவன் இறுதியில் நரகம் போய் சேர்வான்.

பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன்.

இந்த பொய்யர்களாலும் பொய்யர்களின் பொய்களை பரப்பியவர்களாலும் பாதிக்கப்பட்ட அபு அப்துல்லாஹ் முதல் ஜவாஹிருல்லாஹ் வரை அனைவரும் அணி வகுத்து வந்து அல்லாஹ்விடம் முறையிட்டு கால்குலேட் பண்ணி நன்மைகளை வாங்கிக் கொண்டு நன்மைகள் இல்லாதவர்களிடம் பாவங்களை கொடுத்து விட்டுப் போவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

எனவே கடந்த காலங்களில் பி.ஜே, ஷம்சுல்லுஹா போன்ற பொய்யர்களை நம்பி அவர்கள் கூறிய அவதூறுகளை பரப்பியதற்றகாக அபு அப்துல்லாஹ் முதல் ஜவாஹிருல்லாஹ் வரை உள்ள அனைவரிடமும் நான் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

சத்திய நேசன் உரிமையாளர்கள்.

வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தின் உதவியால் நடந்து வரும் மாத இதழில் ஆசிரியர் துணை ஆசிரியர் என்றுள்ள டம்மிகளும் ஒரிஜினலும்தான் சத்திய நேசன் என்ற பெயரில் வரும் மெயில்களின் உரிமையாளர்கள். 

இந்த தரத்தில் உள்ளவர்கள்தாம் தவ்ஹீதை நிலைநாட்டப் போகிறார்களாம். இவர்களின் தரமே இப்படி என்றால் இவர்கள் பின்னால் செல்பவர்களின் தரம் எப்படி இருக்கும்? எழுதவும் வேண்டுமா? சத்திய நேசன் அணி பற்றி இப்போதைக்கு இவ்வளவு போதும் என்று எண்ணுகிறேன்.

அவசரமாக வெளிப்பட்ட அந்த ஆண் வேறு யாருமல்ல.

மண்ணடி ஒய்.கே. மேன்சன் முன் நான்பார்க்கிங்கில் ஒரு பைக் நிற்கிறது. போலீஸ் வருகிறது. பைக் யாருடையது? லாட்ஜ் பொறுப்பாளி பைக்குக்கு உரியவர் பெயர் சொல்லி இந்த ரூமில் இருப்பார் கூட்டி வா என்கிறார். 

தட்டுங்கள் திறக்கப்படும் என்ற கதவு தட்டப்படுகிறது. திறக்கப்படவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவு திறக்கப்படுகிறது. கதவை திறந்தவர் யாஸ்மின் என்ற பெண். 

பைக்கை நான்பார்க்கில் விட்டு விட்டு வந்துள்ளவர் பெயரை சொல்லி கேட்டதற்கு இல்லை என்று பதில் சொல்லி உள்ளார் யாஸ்மின். 

போலீஸ் வந்துள்ளது என்றதும் ஒரு ஆண் மகன் அவசரமாக வெளிப்படுகிறார். அவர் வேறு யாருமல்ல தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் டைரக்டர் பாக்கர்தான் அந்த ஆண் மகன். பெண் யார்? என்று கேட்டால் ஐ.ஏ.எஸ். கோச்சிங்குக்கு வந்துள்ளது என்று உளறி இருக்கிறார். ஐ.ஏ.எஸ். கோச்சிங் காலம் இது அல்லவே என்ற குறுக்கு கேள்வியில் மாட்டிக் கொண்டார்.

முபாஹலாவுக்கு அழைத்தது எப்படி?

மீடியா வேல்டு பெயரில் போடப்பட்டுள்ள லாட்ஜ் ரூமில் யாஸ்மின் என்ற பெண். செய்தி காட்டுத் தீயாக பறக்கிறது. சத்திய நேசன் ஆசிரியர் முற்பகல் போன்றோருக்கு சந்தோஷமோ சந்தோஷம். 

சத்திய நேசன் மெயிலின் ஒரிஜினல் ஆசிரியரோ தலையில் அடித்துக் கொண்டு பரபரக்கிறார். உடனே தலையிட்டு என்ன கேஸ் வேண்டுமானாலும் பதியுங்கள் விபச்சார வழக்காக பதிந்து விடாதீர்கள் என்று கெஞ்சி கூத்தாடி பாக்கரை காப்பாற்றி விட்டு தனது மானத்தையும் காப்பாற்றி விடுகிறார். .

யாஸ்மின், 10. புது ஆயக்குடி, பழனி. என்ற முகவரியில் சென்று அக்கம் பக்கத்து வீடுகளில் சுற்று வட்டாரங்களில் விசாரித்தால் உண்மைகள் வெளி வரும். இன்று சத்திய நேசன் முன்பு இறை நேசன் 1988ல் உண்மை நேசன் ஒரு பள்ளிவாசல் பெயரால் கடிதம் வெளியிட்டு முபாஹலாவுக்கு அழைத்தது எப்படி? அடுத்த இதழில்.
அன்புடன்:
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.
22-07-2004

------------------------------------------------------------------------------------
அன்புள்ள தோழர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். பரகத், ரசூல்மைதீன் என்று ஒவ்வொருவருக்கும் பக்கம் பக்கமாக பதில் எழுதிய பசுலுல் இலாஹி அவர்களால் நான் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுத முடியவில்லை. கீழ் காணும் கடிதம் அனுப்பி 3 வாரங்களுக்கு மேலாகியும் பதில் எழுத முடியாத பசுலுல் இலாஹி அதில் இருந்து தப்பிக்க இஸ்லாமிய பிரச்சாரகர்களின் குறைகளை பகிரங்கப்படுத்தலாமா? என்று மெயில் அனுப்பி நழுவி உள்ளார். கீழ் காணும் கடிதம் பசுலுல் இலாஹிக்கும் இளையவன் அவர்களுக்கும் அனுப்பப்பட்டது. பசுலுல் இலாஹியின் எல்லா கடிதங்களையும் தனது சைட்டில் இடம் பெறச் செய்துள்ள இளையவன் பசுலுல் இலாஹியால் பதில் தர முடியாத இந்த கடிதத்தையும் இளையவன் சைட்டில் இடம் வேண்டும். செய்வாரா?


ஜனாப் பசுலுல் இலாஹி அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

பாவத்தில் பங்கு இல்லையா? என்று பெரிய பட்டியலையே போட்டு உள்ளீர்கள். சம்சுல்லுஹாவை துபையில் யாருக்குத் தெரியும்? வாழ்வுரிமை மாநாட்டுக்கு யாரும் பணம் தரமாட்டேன் என்று சொன்னார்களா? லுஹா வந்தால்தான் தருவேன் என்றார்களா? மஸ்ஜிதுர்றஹ்மான் வசூலுக்கு வரும் முன் த.மு.மு,க. சார்பில் வந்து அறிமுகம் ஆகி விட்டால் மஸ்ஜிதுர்றஹ்மான் வசூல் எளிதாக இருக்கும் என்று உங்கள் சுயநலத்துக்காக வாழ்வுரிமை மாநாட்டு வசூலுக்காக என்று லுஹாவை துபை வரவழைத்தீர்கள.; அவரா கஷ்டப்பட்டு கேம்ப் கேம்பாக போய் வசூல் செய்தார். த.மு.மு.க. தொண்டர்கள் வசூல் செய்தார்கள்.அவரை ராஜபோக மரியாதையுடன் அரபி சாப்பாடு உபசரிப்புடன் பைசலில் தங்க வைத்திருந்தீர்கள். இது உண்மையா பொய்யா இந்த பாவத்தில் பங்கு யாருக்கு?

ஒழுங்காக வந்து கொண்டிருந்த அல்முபீன் ஆசிரியரை மைதீன் உலவியை நீக்க பி.ஜே. லுஹா சொன்னதும் பொய்க் காரணம் கூறி முகைதீன் உலவியை நீக்கினீர்களா இல்லையா? இந்த பாவத்தில் உங்களுக்கு எவ்வளவு பங்கு? இதற்காக எத்தனை விருந்துடன் கூடிய கூட்டம் நடத்தி துபை ஐ.யு.ஊ.யில் உள்ளவர்களை சரி கட்டினீர்கள்?

லுஹா தங்கள் சாய்பு மாதிரி ஆகிவிட்டார் என்று எழுதி உள்ளீர்கள் அவரை தங்கள் சாய்பு ஆக ஆக்கியது நீங்கள்தானே. உங்கள் சுயநலலுக்காக வாழ்வுரிமை மாநாட்டுக்கு வந்தபோதும் அடுத்து நீங்கள் சொல்லும் 10லட்சம் வசூலுக்கு வந்த போதும் அவரது துணியை துவைக்க ஒரு ஆள் அய்ன் பண்ண ஒரு ஆள் என்று பைசலிலும் ரூமிலும் செய்து கொடுத்தீங்களே அப்பொழுது மட்டும் அவர் சாய்பு தங்களா தெரிய வில்லையா? பி.ஜே.யை பொய்ப்படுத்த பிரசுரம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது பி.ஜே. சொல்வதையெல்லாம் பொய்ப்படுத்த வேண்டும் என்பதே உங்கள் பிரதான நோக்கமாக ஆகிவிட்டது.

மறுமையில் கமாலுத்தீன் மதனி வந்து முறையிடுவார் என்கிறீர்கள். ஏர்வாடியில் நடந்த ஒற்றுமை கூட்டத்தில் ஒற்றுமை ஏற்படாமல் போக கணக்கு மனைவி இடம் இருக்கு என்று பி.ஜே. சொன்னார் என்று எழுதி உள்ளீர்கள். (பழைய நோட்டீஸில்) இப்பொழுது நீதி நியாயம் சம்பந்தமாக பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் ஏன் அப்பொழுதே தட்டிக் கேட்கவில்லை. பிறகும் பி.ஜேயுடன்தான் இருந்தீர்கள். அதற்குப் பிறகு கமாலுத்தீன் மதனிக்கும் ஜாக்குக்கும் எதிராக நீங்கள் மதுரை மாநாட்டின் போது நோட்டீஸ் போட்டீர்களா இல்லையா? உங்களுக்கு எதிராக கமாலுத்தீன் மதனி மறுமையில் வர மாட்டாரா?

திருமண குத்பாவுக்கு லுஹாவை வர வேண்டாம் என்று சொன்னால் அந்த தெருக்காரர்கள் மீது கோர்ட்டில் கேஸ் போடு போலீஸில் கம்ளைன்ட் செய் என்று ஏவி விட்டீர்;கள். பெண் வீட்டுக்காரர் லுஹா வர வேண்டாம் என மறுத்தால் பெண்ணையே வேண்டாம் என்று மாப்பிள்ளையை மிரட்டச் செய்து லுஹா இன்றி திருமணம் இல்லை என்ற நிலையை உருவாக்கினீர்கள். இப்படியெல்லாம் செய்த நீங்கள் சமீபத்தில் உங்கள் சொந்தக்கார குடும்பத்தில் நடந்த திருமணத்திற்கு லுஹா வர வேண்டாம் என்று காஜா நாயகம் தெரு ஜமாஅத் சொன்னபோது அதை எதிர்க்கவில்லை. மாப்பிள்ளை வீட்டு தெருவில் நிக்காஹ் நடந்தது. பெண் வீட்டுக்கு அடுத்த வீடு உங்கள் அக்காள் வீடு என்பதால் உங்கள் அக்காள் வீட்டு வாசலுக்கு லுஹா வரக்கூடாது என்று அந்த ஜமாஅத் முடிவை ஆதரித்து நின்று உள்ளீர்கள் உங்களின் இந்த செயல் தவ்ஹீது கொள்கைக்கு எதிரானது இல்லையா?

ஊருக்கு உபதேசிப்பவர்கள் என்று மற்றவர்களை விமர்சிக்கும் நீங்கள் பெண் வீட்டில் திருமண விருந்து இல்லை என ஊர் உலகத்துக்கு கூறி விட்டு பெரிய விருந்து நடத்தியதுதான் உங்கள் குடும்ப தவ்ஹீதா? மழுப்பல் இன்றி பதில் சொல்லவும்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.